Horoscope

வியாழன், ஏப்ரல் 22

நான்கு மாடுகள்




ஒரு ஊர்ல நான்கு மாடுகள் இணைபிரியாம சேர்ந்தே இருந்ததாம். மேயப் போகும்போது கூட சேர்ந்தே போகுமாம். தினமும் இந்த நான்கு மாடுகளும் காட்டுக்கு மேயப் போகுங்கலாம். இந்த நான்கு மாடுகளையும் வேட்டையாடனும்னு நினச்ச ஒரு புலி அதுங்க பக்கத்துல போச்சாம். நான்கு மாடுகளும் சேர்ந்து புலியை முட்டி விரட்டிடுசாம்.



இந்த நான்கு மாடுகளும் சேர்ந்து இருந்தா நம்மளால வேட்டையாட முடியாது அப்படின்னு நினச்ச புலி, இதுங்களை பிரிக்கணும்னு நினச்சதாம். உடனே புலி நரியை கூப்பிட்டு விஷயத்தை சொல்லுச்சாம். நரி என்ன சும்மாவா தந்திரக்காரன் ஆச்சே. நரி ஒவ்வொரு மாடுகிட்டையும் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி நான்கு மாடுகளையும் பிரிச்சிடுசாம்.

உடனே புலி இதுதான் சமயம் என்று தனித்தனியாக மேய்ந்த நான்கு மாடுகளையும் அடிச்சு சாப்பிட்டுடுசாம்.


Moral Of the Story: நாம நம்ம மாடுகளை காட்டுல மேய விட்டதால்தான புலி அடிச்சது. அப்படி செய்யாம உங்க தோட்டத்துல பயிர் விளையுற இடத்துல மேய விடுங்க. எந்த புலி வருதுன்னு பார்த்துடலாம்.

10 கருத்துகள்:

Unknown சொன்னது…

இப்ப மாடுகளே இல்லை, இருந்தாதானே மேய விடுறதுக்கு..

GD சொன்னது…

நான்கு மாடு ஒன்னா இருக்குறத‌ பாத்த‌ புலி அடுத்த‌ நாள் ஒரு
4 புலி ஃப்ர‌ண்ட்சோட‌ வ‌ந்து ஆளுக்கு ஒன்ன‌ ஜாலியா சாப்டுச்சாம்...

‍இது எப்ப‌டி இருக்கு...‌

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ கே.ஆர்.பி.செந்தில்

ஓ அதனாலதான் ராமராஜன் படம் நடிக்கிறதா நிப்பாட்டிடாரோ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ GD

அந்த GD நாயுடு மாதிரியே யோசிக்கிறீங்களே

வெங்கட் சொன்னது…

இந்த மாதிரி சின்ன வயசு
கதைய எல்லாம் உல்டா
பண்ணுனீங்க எனக்கு
கெட்ட கோவம் வரும்..

கதையில வர்றது
புலி இல்ல சிங்கம்..!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@வெங்கட்

தேங்க்ஸ். எல்லோரும் பழைய கதைன்னு சொல்லிடுவாங்களோன்னு கவலைப்பட்டேன். நல்லவேளை ரெண்டும் வேற வேற கதைன்னு சொல்லிடீங்க. அது சிங்கம் இது புலி அப்பா வேற வேற கதைதான...

GD சொன்னது…

சிங்க‌ம் சிங்கிளாதான் போகும் லாஜிக் இடிக்கும்ல‌
அதான் சிங்க‌த்த‌ அசிங்க‌ ப‌டுத்தாம‌ புலினு மாத்தியாச்சி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ரொம்ப தேங்க்ஸ் GD, ரூம் போட்டு யோசிப்பீங்களோ?

பெசொவி சொன்னது…

அருமையான நீதிக் கதை. என்னுடைய ஒரு பழைய கதையைப் படிங்க (புது நீதியோட)

http://ulagamahauthamar.blogspot.com/2010/03/blog-post_13.html

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பெயர் சொல்ல விருப்பமில்லை nanri

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது