Horoscope

சனி, ஜூலை 3

மின்சாரக் கனவு

Never Drink while Driving - ஏன்னா வண்டி ஓட்டும்போது குடிச்சா பீர் கீழ சிந்தி வேஸ்ட் ஆயிடுமே....
=====================================
சில முதலாளிங்க மேகம் மாதிரி. திடீர்ன்னு காணாம போயிடுவாங்க. திடீர்ன்னு வந்து இம்சை பண்ணுவாங்க.
=====================================
தப்பு செய்வது மனித இயல்பு. நம்ம தப்பை அடுத்தவங்க மேல போடுறது போரை விட பெரிய விஷயம்.
=====================================
ஒரு மனிதன் கல்யாணம் ஆனா பிறகு பொய் பேசுவதில்லை. ஏன் தெரியுமா. அவனைத்தான் பேசவே விடுறதில்லையே.
=====================================
ஒரு பெண் ஒரு ஆணை அவன் ஒருநாளாவது மாறுவான் என எண்ணி திருமணம் செய்கிறாள். ஒரு ஆண் ஒரு பெண்ணை அவள் மாறமாட்டாள் என்று எண்ணி திருமணம் செய்கிறான். இரண்டுமே நடப்பதில்லை.
=====================================
உங்கள் வாழ்க்கையே உங்கள் கனவுகளில்தான் இருக்கிறது. நேரத்தை வேஸ்ட் செய்யாமல் போய் தூங்குங்க.
=====================================
ஒரு சின்ன பையன் மிஸ் கிட்ட: மிஸ் என்னை உங்களுக்கு பிடிக்குமா?
மிஸ்: எஸ் டியர். நீ என் செல்லம்
பையன்: அப்ப எங்க அப்பா அம்மாவை உங்க வீட்டுக்கு வர சொல்லவா?
மிஸ்: எதுக்கு?
பையன்: நம்ம விசயமா பேசத்தான்..
மிஸ்: (கோவமா) என்ன சொல்ற?
பையன்: ஹேய் என்னோட ட்யுஷன் விசயமாத்தான். நமக்கு படிப்புதான் முக்கியம்...
மிஸ்: ???????????????
=====================================
காந்தி சின்ன விளக்கு வச்சித்தான் படிச்சார்..
கிரகாம் பெல் மெழுகுவர்த்தி வச்சித்தான் படிச்சார்..
ஷேக்ஸ்பியர் தெருவிளக்குலதான் படிச்சார்...

ஒண்ணு மட்டும் புரியல. இவங்க "பகல்ல எல்லாம் என்ன பண்ணினாங்க"?
=====================================
பொண்ணுங்க ரோட்ட கிராஸ் பண்ணினா எல்லோறோரும் வண்டிய நிப்பாட்டிட்டு "பாத்து போம்மா" அப்டின்னு சொல்லுவாங்க. அதே நேரம் பையன் கிராஸ் பண்ணினா "சாவுகிராக்கி வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா" அப்டிம்பாங்க. என்ன உலகமடா இது..
=====================================
அரவிந்தசாமி- மின்சாரக் கனவு
ஆற்காடு வீராசாமி- மின்சாரமே கனவு..
=====================================

24 கருத்துகள்:

பிரேமா மகள் சொன்னது…

எஸ்.எம்.எஸ் சிங்கம் வாழ்க.....

அருண் பிரசாத் சொன்னது…

தல, முடிவா இப்பொ என்ன சொல்ல வர்றீங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ பிரேமா மகள் thanks

@ அருண் பிரசாத் வண்டிய நிப்பாட்டிட்டு தண்ணி அடிங்க.

Unknown சொன்னது…

//அரவிந்தசாமி- மின்சாரக் கனவு
ஆற்காடு வீராசாமி- மின்சாரமே கனவு..//

very nice

Unknown சொன்னது…

முதலும், கடைசியும் அக்மார்க் கலக்கல்... சூப்பர் போலிஸ் ...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

-------------------------------
சிரிப்பு "போலீ" ஸ்ஸ்ஸ்.......
-------------------------------

அடிக்கடி கரெண்டு போகுதுல்ல.. அது எங்கே போகுதுன்னு
கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்!
-------------------------------

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி கலாநேசன்

//அடிக்கடி கரெண்டு போகுதுல்ல.. அது எங்கே போகுதுன்னு கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்!
@ உலவு.காம் கோவிச்சிட்டு அம்மா வீட்டுக்கு போயிருக்கும்.

@ நன்றி கே.ஆர்.பி.செந்தில் அண்ணே

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//பொண்ணுங்க ரோட்ட கிராஸ் பண்ணினா எல்லோறோரும் வண்டிய நிப்பாட்டிட்டு "பாத்து போம்மா" அப்டின்னு சொல்லுவாங்க. அதே நேரம் பையன் கிராஸ் பண்ணினா "சாவுகிராக்கி வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா" அப்டிம்பாங்க. என்ன உலகமடா இது..
//

ஹும் எதுனாலும் சொல்லலாம் ஆனா பாருங்க ஆணாதிக்கவாதின்ற பேர் வந்துரும்பாருங்க அதனால படிச்சுட்டேன்னு சொல்லிட்டு எஸ்கேப்பு மச்சி...

Kousalya Raj சொன்னது…

ரொம்ப நல்லா இருக்குங்க!! வேற வழி இல்லங்க , உங்களை பின் தொடர தொடங்கி விட்டேன் :))

Unknown சொன்னது…

எஸ் .எம் .எஸ் ஹெஹேஹ்

மங்குனி அமைச்சர் சொன்னது…

உங்கள் வாழ்க்கையே உங்கள் கனவுகளில்தான் இருக்கிறது. நேரத்தை வேஸ்ட் செய்யாமல் போய் தூங்குங்க. ///


யாருப்பா அது கனவு காணும் போது டிஸ்ட்ரப் பண்றது

http://rkguru.blogspot.com/ சொன்னது…

///அரவிந்தசாமி- மின்சாரக் கனவு
ஆற்காடு வீராசாமி- மின்சாரமே கனவு..///

Super Comment..... Good Post

செந்தில்குமார் சொன்னது…

நல்லாதான் இருக்கு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஹும் எதுனாலும் சொல்லலாம் ஆனா பாருங்க ஆணாதிக்கவாதின்ற பேர் வந்துரும்பாருங்க அதனால படிச்சுட்டேன்னு சொல்லிட்டு எஸ்கேப்பு மச்சி...//

ஆமா மச்சி அது வேற பயமா இருக்கு. இந்த பொண்ணுங்களே இப்படித்தான். கலாய்ங்க எஜமான் கலாய்ங்க.

@ கௌசல்யா ரொம்ப நன்றிங்க. தொடர்ந்து வாங்க.

@ A.சிவசங்கர் நன்றி

@ மங்கு அரளி டீப் பிரை சாப்பிட்டு தூங்கினா நல்ல கனவு வரும்.

@ rk guru நன்றி

@ செந்தில்குமார் நன்றி

ஜெயந்தி சொன்னது…

சிரிப்பு போலீஸ்சுன்னு பேர மட்டும் வச்சுக்கிட்டு போலீஸ் சிரிப்பு எங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சிரிப்பு போலீஸ்சுன்னு பேர மட்டும் வச்சுக்கிட்டு போலீஸ் சிரிப்பு எங்க?//

@ ஜெயந்தி
பஞ்சு அருணாசலம் என்ன பஞ்சு வியாபாரமா பண்றார்?
பறவை முனியம்மான்னு ஒரு கிழவி திரியுது அதென்ன பறந்துக்கிட்டா அலையுது?

சிரிப்பு போலீஸ் அப்டிங்கிறது பேரு. அதெல்லாம் ஆராயப்படாது..

வெங்கட் சொன்னது…

// அரவிந்தசாமி- மின்சாரக் கனவு
ஆற்காடு வீராசாமி- மின்சாரமே கனவு.. //

" தமிழ்நாட்டில் இனிமே
மின் தட்டுப்பாடு இருக்காது..
மின் தட்டுப்பாடு இருக்காது.. "

ஆற்காடு சார்.. ஆற்காடு சார்..
அட எழுப்பி விடுங்கப்பா இவரை..
தூக்கத்துல என்னமோ உளர்றார்..

நம்ம ரமேஷ் சொன்னது சரிதான்லே..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ வெங்கட் நீங்க நல்லவரா கெட்டவரா? என்னை பாராட்டுறீங்களா இல்லை கலாய்க்கிரீங்கலான்னு ஒண்ணுமே புரியல...

Karthick Chidambaram சொன்னது…

கலக்கல் எஸ். எம். எஸ் கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ thanks Karthick Chidambaram

a.chandarsingh சொன்னது…

அரவிந்தசாமி- மின்சாரக் கனவு
ஆற்காடு வீராசாமி- மின்சாரமே கனவு..
=====================================

very very super.thodarungal ungal sevaiyai..........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி a.chandarsingh

Jey சொன்னது…

ஒரு மனிதன் கல்யாணம் ஆனா பிறகு பொய் பேசுவதில்லை. ஏன் தெரியுமா. அவனைத்தான் பேசவே விடுறதில்லையே.///

படித்ததில் பிடித்தது.
எனக்கு கல்யாணம் ஆயிடிச்சிங்ங்கோவ்வ்வ்வ்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஒரு மனிதன் கல்யாணம் ஆனா பிறகு பொய் பேசுவதில்லை. ஏன் தெரியுமா. அவனைத்தான் பேசவே விடுறதில்லையே.///

படித்ததில் பிடித்தது.
//

@ jey இந்த கருத்துரை உங்கள் வீட்டுக்கு ரீ-டைரெக்ட் செய்யப்படுகிறது....

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது