Horoscope

வியாழன், செப்டம்பர் 30

எந்திரன் FDFS from ஜப்பான்

எந்திரன் பீவர் ஆரமிச்சாச்சு. பீவருக்கு மருந்து வேணும்னா நம்ம பங்காளி "என்னது நான்  யாரா" கிட்ட கேளுங்க. ஆளாளுக்கு எந்திரன் பதிவை போட்டு தாக்குறாங்க. நாமளும் ஏதாச்சும்  பண்ணனும். இல்லைன்னா பதிவுலகுல சாமிக் குத்தம் ஆகிடும். எந்திரன் பத்தி என்ன பதிவு போட்டுருக்கேன்னு கேக்குறாங்க. ஒன்னும் போடலைன்னா நீயெல்லாம் ஒரு பிரபல பதிவரான்னு கேக்குறாங்க.


எந்திரன் தியேட்டர் வாசல்ல படம் பாக்கிறவங்க விரல்ல மை வைக்கிறாங்களாம். படம் பாக்காதவங்களுக்கு ரேசன் கார்டு கிடையாதாம். இந்திய குடிமகன் பதவி பறிக்கப் படுமாம். அதனால சீக்கிரம் பாத்துட்டு வாங்க. இல்லைனா வீட்டுக்கு டெரர் எழுதிய தமிழ் கவிதைகள் அனுப்பி வைக்கப் படுமாம்.

படமே பாக்காமல் யாராவது "மீ தி பர்ஸ்ட்டு" அப்டின்னு சவுண்ட் விட்டால் சட்டம் தன் கடமையை செய்யும் என்று உளவுத்துறை கூறி உள்ளது.

நானும் எந்திரன் பத்தின தகவல்களை பதிவுலக நண்பர்கள்களுக்காக (சில பேரு என்னை கொலையா கொல்றானுங்க. இருந்தாலும் நண்பன்தான்) சேகரித்தேன்.

எந்திரன் கொண்டாட்டம் ஜப்பானில். மக்கள் ஆராவாரம். எந்திரனைக் காண மக்கள் வெள்ளம். காணக் கிடைக்காத அந்த எந்திரன் ஸ்டில்ஸ் பதிவுலக மக்கள் உங்களுக்காக தேடி கண்டுபிடித்து போட்டிருக்கிறேன்.

ஜப்பானில் உள்ள நண்பர்கள் எந்திரனை பார்த்துவிட்டு உலகத்திலையே இந்த மாதிரி பார்த்ததில்லை. கண்டிப்பாக சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என்று என்னிடம் தொலைபேசியில் கூறினார்கள்.

அந்த பிரத்தியேக ஸ்டில்ஸ் உங்களுக்காக:
 






எந்திரன் எப்படி இருக்கும். இப்படி இருக்கும். பிம்பிளிக்கி பிளாப்பி...

செவ்வாய், செப்டம்பர் 28

இன்னொன்னுதான அது

அக்கா குழந்தைகளோட மூணு நாளா சென்னை சுத்திப் பார்த்துக்கிட்டு இருக்கேன். வேலை வெட்டிக்கு வேற போகலை. நேத்து மெரீனா பீச் போனோம். அங்க நல்லா சுத்தீட்டு வீட்டுக்கு வந்த பிறகு பார்த்தா குழந்தையோட ஒரு கால் கொலுசைக் காணோம்.

அவளை நான் கூப்புட்டு எங்கடா ஒரு கால் கொலுச காணோம்ன்னு கேட்டேன். அவ ரொம்ப விவரம். கொலுசு இருக்குற இன்னொரு காலை காட்டி லூசா மாமா நீ இந்தா ஒரு கால்ல கொலுசு இருக்கே. உனக்கு கண்ணு தெரியலையா அப்டின்னு கேட்டா. கடைசி வரைக்கும் இன்னொன்னுதான் அதுன்னு சாதிச்சிட்டா.

என்ன சொல்றது. இந்த கால குழந்தைங்க கிட்ட ரொம்ப எச்சரிக்கையா பேசலைன்னா நமக்கு பல்பு கொடுத்துடுறாங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

திங்கள், செப்டம்பர் 27

டெரரின் வில்லத்தனம்

இப்ப குவார்டேர்லி லீவ்(குவாட்டர் இல்லை). அக்கா மற்றும் அக்கா குழந்தைங்க லீவுக்கு சென்னை வந்திருக்காங்க. ரெண்டு நாளா அவங்களை கூப்ட்டுக்கிட்டு சென்னை சுத்திக் காட்டிக்கொண்டு இருக்கேன்.

இன்னிக்கு காலைல சிறுவர் பூங்கா போகலாம்னு பிளான். வீட்டு பக்கத்துல உள்ள ஆட்டோகாரன் கிட்ட கேட்டா 200 ரூபாய் வேணும்ன்னு கேட்டான். சரி இது கட்டுபிடி ஆகாது. பஸ்லையே போகலாம். பள்ளிகரணை to வேளச்சேரி 5 ரூபாய் டிக்கெட்(5*5=25). வேளச்சேரி டு சிறுவர் பூங்கா 5 ரூபாய் டிக்கெட்(5*5=25).50 ரூபாய்ல செலவு முடிஞ்சிடும். வாங்க பஸ்ல போகலாம்னு கிளம்பினோம்.

வீட்டில இருந்து பஸ்ஸ்டாப் ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும். பஸ்ஸ்டாப் வந்ததும் எல்லா பஸ்ஸும் நல்ல கூட்டம். குழந்தைகளால ஏற முடியலை. அப்புறமா ஒரு AC Bus வந்தது. எல்லோரும் ஓடி போய் அதுல ஏறிட்டாங்க. ஒரு டிக்கெட் இருபது ரூபாய். நூறு ரூபாய் காலி.


வேளச்சேரி வந்து சேர்ந்தாச்சு. ஒரு மணி நேரமா பஸ் வரலை. நேரம் ஆகுது ஆட்டோல போயிடலாம்னு அப்பா சொன்னார். சரின்னு ஆட்டோகரன் கிட்ட கேட்டா 150 ரூபாய் சொல்றான். அப்புறன் பேரம் பேசி 120 ரூபாய்க்கு முடிச்சேன்(அதுக்கு குறைஞ்சு யாரும் வரலை). 120 + 100 =220 ரூபாய் காலி. வீட்டுக்கிட்ட ஆட்டோகாரன் 200 ரூபாய்தான் கேட்டான். 


அங்கே ஆட்டோ பிடிச்சிருந்தா இருபது ரூபாய் லாபம். ஒரு கிலோமீட்டர் நடையும் மிச்சம். என்னோட கணக்கு எப்பவுமே மிஸ் ஆனதில்லை. விஞ்ஞானி அனுப்புற ராக்கட் வேணா மிஸ் ஆகலாம், என் கணக்கு மிஸ் ஆகாதே. ஏன் இப்படி ஆச்சுன்னு உக்கார்ந்துகிட்டு, நின்னுக்கிட்டு, குப்புற படுத்து மல்லாக்க படுத்து யோசிச்சேன். அப்புறமா காரணமும் கண்டு பிடிச்சிட்டேன். 


இன்னிக்கு காலைல எந்திச்சதுமே பல்லு கூட விளக்காம இந்த பதிவை போய் படிச்சேன்(இறைவனிடம் ஒரு வரம்....)

இதுகெல்லாம் இந்த பதிவுதான் காரணம்.


இதுக்கெல்லாம் காரணம் இந்த பதிவுதான். இத படிச்சு எத்தனை பேரு மண்ணாய்ப் போனாகளோ. எலேய் டெரர் இதுக்கெலாம் நீ பதில் சொல்லியே ஆகணும்...

....

வெள்ளி, செப்டம்பர் 24

நான் எந்திரன் பாப்பேன்



காலேஜ் படிக்கும்போது காலேஜ் கட் அடிச்சிட்டு அடிக்கடி படத்துக்கு போவேன்(இது எங்களுக்கு தெரியாதா. அதான உன்னோட மெயின் வேலை). அப்போ ஹாஸ்டல்ல இருந்ததால நைட் படத்துக்கு போயிட்டு லேட்டா வந்து வாட்ச்மன் கிட்ட கெஞ்சி ஹாஸ்டல்குள்ள வருவோம்.

என்னோட HOD தான் ஹாஸ்டல் வார்டன். சனிக்கிழமை எங்களோட அவரும் கிளம்பி படத்துக்கு வருவார். காலேஜ் ல தான் அவர் HOD. மத்தபடி நல்ல நண்பர் அவர். படத்துக்கு போனா, பஸ் டிக்கெட், சினிமா டிக்கெட், சாப்பாட்டு செலவு எல்லாம் அவரோடதுதான். அவர் ரஜினியின் தீவிர ரசிகர்.

அப்பத்தான் படையப்பா பட ரிலீஸ் நேரம். எங்களுக்கும் காலேஜ்ல internal எக்ஸாம் டைம். எங்க HOD room-ல உக்கார்ந்து படையப்பா பாடல்கள் கேக்க ஆரமிச்சோம். படம் ரிலீஸ் அன்னிக்கு எங்களுக்கு Internal எக்ஸாம். அதனால எக்ஸாம் முடிஞ்சு evening படத்துக்கு போகலாம்னு பிளான்.

படம் ரிலீசுக்கு ரெண்டு நாளைக்கி முன்னாடி எங்க HOD எங்களை கூப்பிட்டார். வர்ற சனிகிழமை படம் ரிலீஸ். எனக்கு முத நாள் முதல் ஷோக்கு டிக்கெட் வேணும். வாங்கி தர முடியுமான்னு கேட்டார். சரி சார் அப்டின்னோம். சரி இந்தா 500 ரூபாய். போய் எனக்கு, உங்க நாலு பேருக்கு சேர்த்து அஞ்சு டிக்கட் எடுத்துடு அப்டின்னார்.

சார் அன்னிக்கு எங்களுக்கு Internal Exam. எப்படி வர்றது.

அவர் சொன்னார் "அட போடா பெரிய செமஸ்டர் எக்ஸாம். internal எக்ஸாம் தான. நான் பாத்துக்கிறேன். போய் டிக்கெட் எடுத்துட்டு வா".

சரின்னு தியேட்டர்ல போய் டிக்கெட் reservation பண்ணனும்னு கேட்டா, சார் உங்களுக்கே ஓவரா தெரியலை. நம்ம ஊர்ல reservation எதுக்கு. படம் ரிலீஸ் அன்னிக்கு காலைல வாங்க டிக்கெட் கண்டிப்பா கிடைக்கும்னு சொல்லிடாங்க. படம் ரிலீஸ் அன்னிக்கு முதல் ஷோ பாத்தாச்சு. (ரெண்டு நாள் கழிச்சு அம்மா கூப்பிட்டு, படையப்பா படத்துக்கெல்லாம் போகாத ரொம்ப கூட்டமா இருக்கும், கொஞ்ச நாள் கழிச்சு போய்க்கோன்னு வேற சொன்னாங்க. இல்லம்மா நான் பாத்துட்டேன்னு எப்படி சொல்றது)

ஒரு வாரம் கழிச்சு எக்ஸாம் எழுதாதவன்களை ப்ரின்சி கூபிடுரார்னு தகவல். எப்பவுமே எக்ஸாம் எழுதாதவன்களை டிபார்ட்மென்ட்ல தான் விசாரிப்பாங்க. இது என்னடா புது பழக்கம்ன்னு ப்ரின்சிய பாக்க போனோம். எப்பவுமோ எக்ஸாம் கட்டுன்னா இருபதோ முப்பதோ பேர்தான் இருப்பாங்க.

ஆனா இந்த தடவை 120 பேருக்கு மேல. இதுக்கெல்லாம் ரஜினி தான் காரணம். அவர் ஏன் எக்ஸாம் டைம்ல படம் ரிலீஸ் பண்றாரு. ப்ரின்சி அரண்டு போயிட்டார். ஏன் இவ்ளோ பேர் எக்ஸாம் எழுத வரலைன்னு. ஆளாளுக்கு ஒவ்வொரு கதை சொல்றோம். அவர் கேக்குறதா இல்லை.

அப்பத்தான் எங்க HOD வந்து படையப்பா படம்தான் இவங்க கட் அடிச்சதுக்கு காரணம்ன்னு சொன்னார். ப்ரின்சி "அடபாவிகளா.ரஜினி படத்துக்கு இவ்ளோ பேர் கட்டா? அத்தனை பேருக்கும் என்ன தண்டனை கொடுக்குறது. போய் தொலைங்க. அந்த தேதில உள்ள எக்ஸாம் எல்லோருக்கும் திரும்பி இன்னொருநாள் எழுதுங்க" அப்டின்னு சொல்லிட்டார். நாங்க பரவா இல்லை. அன்னிக்கு எக்ஸாம் எழுதினவங்கதான் பாவம். திரும்பி எழுதணும். ரஜினியால் எங்களுக்கு கிடைத்த மன்னிப்பு அது.

நான் எந்திரன் பாப்பேன். அதுக்கு ரெண்டு காரணம்.

1 . ரஜினி
2 . ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு(எனக்கு இவரை ரொம்ப பிடிக்கும்)

..

செவ்வாய், செப்டம்பர் 21

மீ தி பர்ஸ்ட்



நான் சின்ன வயசுல இருந்து ரொம்ப நல்ல பையங்க. வீட்டுல அது வேணும் இது வேணும்னு கேட்டு தொல்லையே பண்ணினதில்லை(நீயே ஒரு தொல்லை). எனக்கு விவரம் தெரிஞ்சு நான் வீட்ல கேட்டது சைக்கிள். அதுக்கே வீட்டுல செம திட்டு. அடுத்த தெருவுல இருக்குற ஸ்கூல்க்கு படிக்க(அழுத்தமாக படிக்கவும்) போறதுக்கு சைக்கிள் தேவையா. கிடையாது அப்டின்னு சொல்லிடாங்க. அப்புறம் அழுது புரண்டு சைக்கிள் வாங்கினேன்.

அப்புறம் UG படிக்கும்போது(மறுபடியும் அழுத்தமாக படிக்கவும்) வீட்டுல கம்ப்யூட்டர் சயின்ஸ் கோர்ஸ்ல சேர்த்து விட்டுடாங்க. காலேஜ்ல டப்பா கம்ப்யூட்டர் தான். சரி கம்ப்யூட்டர் சென்டர்ல போய் எதாச்சும் கோர்ஸ் பபடிச்சு அறிவை வளர்க்கலாம்னு  நினைச்சேன். ஜாவா படிக்கலாம்ன்னு நானும், அங்க உள்ள கவுன்சிலர் பிகர கரக்ட் பண்றதுக்கு நம்ம இம்சை அரசன் பாபுவும் (மவனே வீட்டுல உன் வீட்டுக்காரம்மா கிட்ட அடி வாங்கினா நான் பொறுப்பில்லை) ஒரு பாடாவதி கம்ப்யூட்டர் சென்டர்ல சேர்ந்தோம்.

நான் ஒழுங்கா படிச்சு ஜாவா certificate வாங்கிட்டேன். பாபு அந்த பிகர கரெக்ட் பண்ணிட்டாரான்னு அவர்கிட்டதான் கேக்கணும்(தேவா அண்ணே இத நீங்க கேக்குறீங்க).

அப்புறம் PG வந்ததுக்கப்புறம் எனக்கு கம்ப்யூட்டர் வீட்டுல இருந்தா நல்லா படிக்கலாம்னு நினைச்சேன். வீட்டுல கேட்டா அடிக்க வந்துட்டாங்க. பின்ன, அப்பெல்லாம் கம்ப்யூட்டர் 64MB RAM System-மே Rs.50,000-க்கும் மேல. ஆனா நான் விடலை. கம்ப்யூட்டர் வாங்கி கொடுத்தாதான் காலேஜ் போவேன்னு சொல்லிட்டேன். பிறகு அப்பா, அம்மா லோன் போட்டு கம்ப்யூட்டர் Rs.45,000 க்கு வாங்கி கொடுத்தாங்க(Rs.47,000 வாங்கி ரெண்டாயிரம் ரூபாய் ஆட்டையப் போட்டாத வீட்டுல சொல்லிடாதீங்க).

எங்க காலேஜ்லையே முதன் முதலா கம்ப்யூட்டர் வாங்கினது நான்தான். கம்ப்யூட்டர் வாங்கினதும் நான் யார்கிட்டயும் "மீ தி பர்ஸ்ட்ன்னு" சொல்லவே இல்லை. கம்ப்யூட்டர்  வாங்கினதும் காலேஜ்க்கு ரெகுலரா போக ஆரமிச்சேன். ஒரு நாள் கூட காலேஜ் (except: Sunday, Govt Holidays) போகாம இருந்ததில்லை. காலேஜ் போய் கிளாஸ் ரூம்ல உர்காந்ததும் எவனாவது "டேய் இப்ப ரிலீஸ் ஆன புதுப்பட சீடி வந்திருச்சாம். பிரண்டு சொன்னான்" அப்டிம்பான். அவ்ளோதான் முத பெல் அடிக்கிறதுக்குள்ள எஸ்கேப் ஆகி எங்க வீட்டுக்கு வந்துடுவோம்.

அதுக்கப்புறம் படிக்கிறதுக்காக வாங்கின என்னோட கம்ப்யூட்டர்ல "Media Player", "Sound Driver" எல்லாம் ஒழுங்கா வேலை செய்யுதான்னு செக் பண்றதுக்காக அந்த புது பட சீடி போட்டுப் பாப்போம்(எங்களுக்கு multimedia ஒரு சப்ஜெக்ட். சோ இது பிரக்டிகல் கிளாஸ். யாரும் தப்பா நினைக்காதீங்க).

அதுக்கப்புறம் வேலைக்கு போனதும் எங்க செட்டுலையே நான்தான்  முதல்ல செல்போன் வாங்கினேன். செல்போன் வாங்கினதும் நான் யார்கிட்டயும் "மீ தி பர்ஸ்ட்ன்னு" சொல்லவே இல்லை.

டிஸ்கி: சரி இப்ப என்ன சொல்ல வர்றே அப்டிங்கிறீங்களா? இவ்ளோ "மீ தி பர்ஸ்ட்" குவாலிடி எங்ககிட்ட இருந்தும் நாங்க எவ்ளோ அமைதியா இருக்கிறோம். ஆனா சில பேர்..(வேணாம். இனிமேலாவது  எங்கிருந்தாலும்  "மீ தி பர்ஸ்ட்" ஆக வர வாழ்த்துக்கள்). இது யாரையும் குறுப்பிடுவன இல்லை.

வெள்ளி, செப்டம்பர் 17

இரவில் டார்ச் வைத்து சூரியனை தேடுபவர்கள்


இடம்: TATSS(தானே அடிவாங்கி தனியாக சமாளிப்போர் சங்கம்)
நாள் & நேரம்: சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னாள் காலை 10 மணி

TATSS தலைவர்: ச்சே எத்தனை நாளைக்குதான் இந்த எதிர் கட்சிங்க(மனதிற்குள்: நமக்கு இருக்குறது ஒரே ஒரு எதிர் கட்சி சங்கம்தான. சரியான அக்கப்போர் சங்கம்) கிட்ட தனியாவே அடி வாங்குறது. சிங்கம் சிங்கிளாத்தான் வரும்ன்னு வலியப் போய் வம்பை விலைக்கு வாங்கிகிடுரனே. அவ்வவ்வ்வ்வ்.

(போன் அழைக்கிறது)

TATSS தலைவர்: ஹலோ TATSS தலைவர், பொருளாளர், செயலாளர், முதல்வர், தொண்டர் பங்கட் பேசுறேன். நீங்க யாரு பேசுறது?

எதிர் முனை: என் பேரு குடிமை மாண்டியன்.

TATSS தலைவர்:சொல்லுங்க என்ன விஷயம்?

குடிமை: நான் இங்க சுபாய் ல இருந்து பேசுறேன்.

TATSS தலைவர்:சொல்லுங்க.

குடிமை: இங்க நான் எங்க offilce லயும் போது இடத்துலையும் தனியா போய் மாட்டிக்கிட்டு தர்ம அடி வாங்குறேன். என்னைக்குன்னு கேள்வி கேக்க ஒரு நாதியும் இல்லை. அங்க இந்தியாலையும் என்னை மாதிரியே ஒருத்தர் இருக்கார்ன்னு கேள்விப்பட்டேன்.

TATSS தலைவர்:யாரு? யாரு?

குடிமை: இந்த குசும்புதான வேணாங்கிறது தல. நீங்கதான் எதிர் கட்சி கிட்ட தினமும் செமையா வாங்குரீங்கலாமே?

TATSS தலைவர்: இது சுபாய் வரைக்கும் பரவிடுச்சா. பரவாயில்லை. எனக்கும் துணைக்கு ஒரு ஆள் தேவை. வந்து சங்கத்துல சேர்ந்துக்கோங்க.

குடிமை: எனக்கு என்ன பதவி தல?

TATSS தலைவர்: இருக்குறது ரெண்டு பேரு.நீங்க சேர்ந்ததே பெரிய விஷயம். உங்களுக்கு என்ன பதவி வேணுமோ அதை எடுத்துக்கிட்டு மிச்சம் மீதி ஏதாச்சும் இருந்தா எனக்கு கொடுங்க.

குடிமை: ஓகே தலை.

ரெண்டு வாரத்துக்கு அப்பால!!!!!

TATSS தலைவர்:ஹலோ குடிமை!!

குடிமை: சொல்லுங்க பாஸ்.

TATSS தலைவர்:எப்படி இருக்கு புது பதவிகள்?

குடிமை: பாஸ். நீங்க ரொம்ப நல்லவங்க. இந்த எதிர் கட்சிக்காரங்க ரொம்ப புத்திசாலிங்க. என்ன சொன்னாலும் அதுக்கு ஒரு பதில் சொல்லி செம அடி கொடுக்குறாங்க.  என்னால முடியலை!!

TATSS தலைவர்:நோ,நோ இப்படியெல்லாம் சொல்ல கூடாது. வாஸ்துப்படி உங்க பேர் சரியில்லை. அதனால பேரை மாத்துங்க.

குடிமை ஊர்ல உள்ள எல்லா ஜோசியர் கிட்டயும் போய் எல்லாரையும் டெரர் ஆக்குகிறார். அத்தனை பேரும் அடித்து துரத்துகின்றனர். அவரே சுயமா சிந்திச்சு(!!!$$$$???) பெயரை மாற்றுகிறார். கறார் மாண்டியன்(TATSS).

கறார்: தல பேரை மாத்திட்டேன். இனி பாருங்க. நம்மளப் பாத்து எல்லோரும் டெரர் ஆகப் போறாங்க!!

TATSS தலைவர்:ம் ம். அந்த பயம் எல்லார் கிட்டயும் இருக்கணும்.

கொஞ்ச நாள் கழித்து:

TATSS தலைவர்: ஷ் யப்பா இந்த கறார் தொல்லை தாங்கலியே. நிறைய பேரை மிரட்டிட்டு வான்னா வெளியூர்ல போய் அடி வாங்கிகிட்டு வருது. போலீஸ் ஸ்டேஷன்ல award திருடுது. நரி கிட்ட வார்னிங் வாங்கிட்டு வருது. காதலிக்கிறேன்ன்னு சொல்லிக்கிட்டு மொக்கை பிகர் கிட்ட கேவலமா வழியுது. தேவையில்லாம ஆண்கள் சமஉரிமை அப்டின்னு சொல்லி பெண்கள்கிட்ட தர்ம அடி வாங்கி ஒரு அப்புராணி புதிய பதிவர் கூட எதிர் பதிவு போடுற நிலைமைக்கு கொண்டு வந்துட்டாரு!! எனக்கும் தர்ம அடி வாங்கிக் கொடுக்காம விட மாட்டார் போல?

ரெண்டு வாரத்துக்கு முன்னால:

போன் ஒலிக்கிறது...

TATSS தலைவர்: ஹலோ நான் பங்கட் பேசுறேன்.

எதிர்முனை: ஹலோ நான்தான் உங்களுக்கு முதல்ல போன் பண்ணினேன். "Me the first". 

TATSS தலைவர்: இல்லியே. இதுக்கு முன்னால நிறைய பேர் போன் பண்ணினாங்களே.

எதிர்முனை:அதெல்லாம் எனக்கு தெரியாது. நான்தான் "Me the first".

TATSS தலைவர்: சரி இனிமே எப்ப நீங்க போன் பண்ணினாலும், என் போன்ல உள்ள received call list-ட நான் Delete பண்ணிடுறேன். நீங்களே எப்பவுமே "Me the first" ஆ இருங்க. சரி எதுக்கு போன் பண்ணினீங்க?

எதிர்முனை: நான் உங்க கட்சில சேரப் போறேன்.

TATSS தலைவர்: ஏற்கனவே என்னால கறாரை  சமாளிக்க முடியலை. அடுத்து ஒண்ணா? அவ்வவ்..(பங்கட் மயங்கி சரிகிறார்.)

டிஸ்கி: இது யாரையும் குறிப்பிடுவன அல்லன்னு சொன்னா  நம்புவீங்க?????

வியாழன், செப்டம்பர் 16

லேட்டஸ்ட் டெக்னாலஜி


ரெண்டு நாளைக்கு முன்னால  சென்னைல இருந்து எங்க ஊர்க்கு train ல போய்க்கிட்டு இருந்தேன். எப்பவும் ட்ரெயின் ஏறினதும் தூங்கிடுவேன். நேத்து ஊருக்கு போகும்போது ட்ரெயின் திருச்சிக்கிட்ட வரும்போது தூக்கம் தெளிஞ்சு எந்திரிச்சு உக்கார்ந்தேன்.

திருச்சி ஸ்டேஷன்ல ட்ரெயின் நின்னது. அப்போ எங்க கோச்ல  என் சீட்டுக்கு எதிர் சீட்டுல ஒரு ஆள் ஏறி உக்கார்ந்தார். சரி திருச்சி டிக்கெட்டா  இருக்கும்ன்னு நினைச்சோம். அப்ப என் பக்கத்துல உள்ள ஒரு பெரியவர் தம்பி நீங்க எங்க போறீங்க அப்டின்னு கேட்டார். அதுக்கு அந்த ஆள் சென்னை போறேன் அப்டின்னு சொன்னார்(பயபுள்ள ட்ரெயின் மாறி ஏறிடிச்சு)

என் பக்கத்துல உள்ள பெரியவர் ரொம்ப குசும்பு பிடிச்ச ஆள் போல. அவர் உடனே அடிச்ச கமெண்ட் "பாருங்க தம்பி டெக்னாலஜி எப்படி வளர்ந்திருக்கு. ஒரே ட்ரெயின்ல ஒரு சைடு திருநெல்வேலி போகுது, இன்னொரு சைடு சென்னை போகுது. What a wonderful Technology" அப்படின்னார்.

அந்த ஆளுக்கு ஒன்னும் புரியலை. அப்புறமா இது திருநெல்வேலி போற ட்ரெயின்னு  தெரிஞ்சிகிட்டு அடுத்த ஸ்டேஷன்ல இறங்கிட்டார்.

கொசுறு:

ஊரிலிருந்து சென்னைக்கு வரும்போது செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வரும் சிலர் reservation coach-சில் ஏறி தூங்குபவர்களை எழுப்பி சீட் கேட்கிறார்கள். நாம எழாவிட்டால் 6 மணி ஆச்சு உனக்கு என்ன தூக்கம். எந்திரிச்சு இடம் கொடு என்று மிரட்டாத குறையாக எழுப்பி விடுகின்றனர். இது reservation coach அப்டின்னு சொன்னாலும் எங்களுக்கு தெரியாதா உன் வேலையை பாரு என்று மிரட்டுகின்றனர்.

அதிலும் சிலர் பாக்கு போட்டு கொண்டு அந்த நாற வாயுடன் பக்கத்தில் உக்கார்ந்துகொண்டு ஆபாசமாகவும்(சென்னை தமிழ் நம்ம ஊர்க்காரங்களுக்கு ஆபாசம்தான்) பேச ஆரமித்து விடுகின்றனர். அதுவும் பேமிலியோட வந்தால் ரொம்ப கஷ்டம்.

இதை T.T.R மற்றும் ரயில்வே பணியாளர்கள் யாரும் கண்டு கொள்வதில்லை. தினமும் வருவபர்களால் ரயில்வேக்கு லாபம்தான். அதற்காக Reservation செய்து வருபவர்களுக்கு ஏன் அவர்கள் தொந்தரவு கொடுக்கிறார்கள். இதற்க்கு விடிவு காலமே இல்லியா? இதுவே நான் எனது ஊரிலிருந்து சென்னைக்கு Reservation Waiting List ticket-டுடன் ஏறினால் TTR allow பண்ணுவதே கிடையாது.

அதனால நான் உங்களுக்கு சொல்றது என்னன்னா ஊர்பக்கம் இருந்து வர்றவங்க செங்கல்பட்டு வரைக்கும் Reservation ticket எடுத்துட்டு செங்கல்பட்டு to சென்னைக்கு லோக்கல் ட்ரெயின்ல வந்துடுங்க. அதுதான் safe .

ஞாயிறு, செப்டம்பர் 12

பாஸ்(எ)பாஸ்கரன் U-ஆ? A-வா?

நேத்து நண்பர்களோட பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துக்குப் போனேன். படம் நல்லாத்தான் இருந்தது. புல் காமெடி படம். அதுக்கு விமர்சனம் எல்லாம் எழுதலை. அந்த அளவுக்கு எனக்கு திறமையும் கிடையாது.

எனக்கு ஒரு சின்ன டவுட். எனக்கு தியேட்டர்ல கொடுத்த டிக்கெட்லதான் டவுட். இந்த டிக்கெட்ட கொஞ்சம் பாருங்க.



Boss(A)
Baskaran(U)

பாஸ் படம் Adults only-ன்னும் பாஸ்கரன் படம் U(குடும்பத்தோட பாக்குற படம்)ன்னும் போட்டுருக்காங்க. ரெண்டு படத்துக்கு டிக்கெட் வாங்கிட்டு ஒரு படம்தாங்க காட்டுனாங்க. அதுவும் பாஸ் என்கிற பாஸ்கரன்(U) படம்தான். அந்த Adults only படத்தை காட்டவே இல்லைங்க.

அதான் டிக்கெட்டுக்கு காசு கொடுத்துட்டனே அப்புறம் ஏங்க ஏமாத்துறாங்க. இப்படி ஏமாத்துனா எங்க போய் கம்ப்ளைன்ட் பண்ணனும். இதக் கேட்டா என் நண்பர்கள் எல்லாம் என்னை கேனை பயல் அப்படிங்கிறாங்க. நீங்க சொல்லுங்க இப்ப நான் என்ன செய்ய?

இப்படியும் பீஸ் புடுங்கலாம்!!!



ஸ்கூல்,காலேஜ் படிக்கும்போது இப்ப உள்ள பசங்க மாதிரி பாக்கெட் மணி நூறோ இருநூறோ கிடைக்காது. ரொம்ப கஷ்டம். ஸ்கூல் படிக்கும்போது பத்து பைசால ஆரமிச்சு ஒரு ரூபாய்ல முடிஞ்சது. காலேஜ் ல 5Rs தான்.

ஸ்கூல்ல ஒரு பிரச்சனையும் இல்லை. ஸ்கூல் விட்டா வீடு. வீடு விட்டா ஸ்கூல். அவ்ளோதான். ஆனா காலேஜ் அப்படி இல்லியே. நிறைய வேலைகள் இருக்கே. காலேஜ் கட் அடிச்சிட்டு சினிமா போகணும். நம்ம ஜில்தண்ணி மாதிரி பொண்ணுங்களை பத்திரமா அவங்க வீட்டுல கொண்டு போய் விடணும். அவங்களுக்கு கிப்ட் வாங்கி கொடுக்கணும்.

இதுக்கெல்லாம் பணத்துக்கு எங்க போறது. எங்களுக்கெல்லாம் டெரர் மாதிரி அப்பா  சட்டைல ஆட்டையப் போட்டு பழக்கம் வேற இல்லை. பின்ன என்ன பண்ணலாம். வீட்டுல வேற மாதிரி வாங்க ஆரமிச்சோம்.

-- Special class fee
-- Tuition fees (Tuition படிக்கிறமோ இல்லியோ பீஸ் கண்டிப்பா வாங்கிடுவோம்)
-- Annual day function fees
-- Notebook, dress fees
-- டிராமால நடிக்கிறேன் அதுக்கு காசு வேணும்.

எனக்கு தெரிஞ்சு மேல உள்ள காரணம் சொல்லி எல்லோரும் அப்பா அம்மாவை ஏமாத்திருப்போம்ன்னு நினைக்கிறேன். 

இப்படி கொஞ்சம் கொஞ்சமா பொய் சொல்லி காசு வாங்க்கிட்டு இருந்தோம். என்னோட நண்பன் ஒருத்தன். அவங்க வீட்டுல அப்பா அம்மா ரெண்டு பேரும் படிக்காதவங்க. அவன் எங்கள விட ஒரு படி மேல போய் அவங்க வீட்டுல ஒரு பொய் சொல்லி பீஸ் வாங்கிட்டு வந்தான் பாருங்க. எனக்கு இன்னைக்கு வரைக்கும் ஜீரணிக்க முடியலை.

ஆமாங்க. அவன் அவங்க வீட்டுல இருந்து வாங்கிட்டு வந்தது Time Table Fees. அதுக்கு ஆயிரம் ரூபாய். அடுத்த வகுப்பு என்னன்னு சொல்ற Time Table-க்கு பீஸ் வாங்க்கிட்டு வந்தது உலகத்துலையே அவன் ஒருத்தனாத்தான் இருப்பான்னு நினைக்கிறேன். இந்த மாதிரி நீங்க யாராவது வித்தியாசமா வீட்டை ஏமாத்திருக்கீங்களா?

வெள்ளி, செப்டம்பர் 10

பிள்ளையாரப்பா


  
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

பிள்ளையார் அனைவருக்கும் பிடித்த ஒரு கடவுள். நாம நினைச்ச மாதிரி பிள்ளையாருக்கு பேர் வைக்கலாம். அவருக்கு எத்தனை பெயர்கள். சித்தி விநாயகர், மரத்தடி விநாயகர், வெளிநாட்டு விநாயகர், காதல் விநாயகர்(ஒரு இடத்துல இதையும் பார்த்தேன்). இப்படி பல பெயர்களோடு உலா வருபவர் நம்ம பிள்ளையாரப்பா தான்.


எனக்கும் ரொம்ப பிடித்த கடவுள் அப்டின்னு கேட்டா விநாயகரைத்தான் சொல்லுவேன். குழந்தையிலிருந்து இன்றுவரை அவரைத்தான் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஸ்கூல் படிக்கும்போது கண்டிப்பாக சட்டைப் பையில் அப்பா கொடுத்த பிள்ளையார்பட்டி விநாயகரின் போட்டோ இருக்கும். அப்பாவிடம் கேட்டு நிறைய தடவை பிள்ளையார்பட்டி கோயிலுக்கு போயிருக்கிறேன். 


அருமையான கோயில் அது. அங்கு போய் பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் மீண்டும் மீண்டும் அங்கு போக வேண்டும் என்று ஆசையாக உள்ளது. விநாயகர் நம்மில் ஒருவர். அவரை மட்டும்தான் நமக்கு பிடித்த வடிவங்களில் அழகு படுத்தி பார்க்கிறோம். 

முன்பெல்லாம் விநாயகர் சதுர்த்தி என்றால் நண்பர்கள் வீட்டிலிருந்தும், பக்கத்து வீட்டிலிருந்தும் சுண்டல், கொழுக்கட்டை வரும். நம்ம வீட்டிலிருந்து அங்கு போகும். இப்போ  கொழுக்கட்டையை கண்ணால் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. 

ஆனால் இப்போதோ வீட்டில் உக்கார்ந்து நமீதா ஆடின குத்து பாட்டுக்களையும், இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக வரும் மொக்கை படங்களையும் பார்த்து விட்டு, விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகிறோம். விநாயகர் சதுர்த்தி அவருக்கு லாபமோ இல்லியோ தனியார் தொலைக்கட்சிகள் சம்பாதிப்பதற்கு நல்ல லாபமான நாள்.

விக்கிபீடியாவிலிருந்து எடுத்த சில தகவல்கள்.

விநாயகரின் வேறு பெயர்கள்

  • பிள்ளையார்
  • கணபதி - கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார்.
  • ஆனைமுகன் - ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
  • கஜமுகன் - கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும். யானைமுகத்தை உடையவராதலினால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
  • விக்னேஸ்வரன் - விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரன் அதாவது பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள்

விநாயக சதுர்த்தி

வருடந்தோறும் ஆவணி மாதம் வளர்பிறைச்சதுர்த்தி திதி அன்று கொண்டாடப்படும் விநாயக சதுர்த்தி, இக்கடவுளுக்கான விழாக்களுள் முக்கியமானதாகும்.

சரிப்பா சென்னைல பேச்சுலர்ஸ் ரூம்ல இருக்குறேன். யாராவது கொழுக்கட்டை சுண்டல் கொடுக்கணும்னு ஆசைப்பட்டா எனக்கு போன் பண்ணுங்க. ஓடோடி வர்றேன்.(கொழுக்கட்டை சாப்ட்டு ரொம்ப நாளாச்சுப்பா!!) அட கொழுக்கட்டைக்காக இல்லப்பா. நீங்க கூப்பிட்ட மரியாதைக்காக. நாங்கெல்லாம் பெரியவங்களுக்கு ரொம்ப மரியாதை தர்றவங்க. 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு "பாஸ் என்கிற பாஸ்கரன்" படம் ரிலீஸ் ஆகுது. நான் போய் பாத்துட்டு விநாயகர் சதுர்த்தியை என்ஜாய் பண்றேன்.  நீங்களும் என்ஜாய் பண்ணுங்க. அருண் போஸ்ட்டுக்கும் என் போஸ்ட்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

மறுபடியும் சொல்றேன்

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்




வியாழன், செப்டம்பர் 9

பிரபலமாக சில சுலபமான வழிகள்

1 குடிச்சிட்டு வரும்போது யாராவது உங்களை குடிகாரன்னு சொன்னா ஊத்திக் கொடுத்தியா அப்டின்னு கேக்கணும்.

2 என்னதான் email, Internet, Bluetooth வந்தாலும் கடிதம்தான் எழுதணும்.

3 என்னதான் ஒருத்தர பத்தி கேவலமா திட்டினாலும் அவர் தயவு தேவைன்னா சூடு சுரணை எல்லாம் விட்டுட்டு அவர் நல்லவர், வல்லவர், தங்கமானவர்ன்னு பேட்டி கொடுக்கணும்.

4 உங்க வீட்டுல உங்க பொண்ணுக்கோ பையனுக்கோ கல்யாணம்னா யாரும் கல்யாணத்துக்கு வரக்கூடாதுன்னு அறிக்கை விடணும்(இது அருண், ஜெய், வெங்கட் தேவா அண்ணா, கே.ஆர்.பி அண்ணா மற்றும் டெரர்க்கு மட்டுமே பொருந்தும்)

5 எங்கயாவது ஊட்டி, கொடைக்கானல்லு நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு திடீர்ன்னு ஞானம் வந்து ஊருக்கு திரும்பி ரோடு சரியில்லை, ஊர்ல கரண்ட் இல்லை அப்டின்னு அறிக்கை விடணும்.

6 பொண்ணுங்க பேர்ல ரெண்டு மூணு ID create பண்ணி உங்களை நீங்களே புகழ்ந்துக்கணும்

7 Twitter, Facebook, Orkut ல தினமும் கேவலமா ஏதாச்சும் கிறுக்கனும்.

8 உன் ஸ்டைல மாத்துன்னு சொன்னாலும் உங்க கேவலமான பழைய style-லையே இருக்கணும். கேட்டா மக்களுக்கு இதான் பிடிக்கும்ன்னு சொல்லன்னும். (சத்தியமா இது டாக்டர் விஜய் இல்லை)

9 முக்கியமா அடுத்தவங்கள வைச்சு உங்களுக்கு பாராட்டுவிழா எடுக்கணும்.

10 இதெல்லாம் முடியலையா? உங்க பேர பிரபலம்ன்னு மாத்திடுங்க. அவ்ளோதான்.

செவ்வாய், செப்டம்பர் 7

பாசக்கார பசங்க..

எத்தனையோ பிறந்தநாள் வந்தாலும் இந்த வருடம் என்னால் மறக்க முடியாது. இதுவரை அம்மா, அப்பா(சில நேரம் அவங்களே மறந்துடுவாங்க. நான் போன் பண்ணி ஞாபகப் படுத்தனும்) அக்கா, தங்கைகள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே போன் பண்ணி வாழ்த்துவார்கள்.

ஆனால் இந்த வருடம் நம்ம பதிவுலக நண்பர்கள் நிறைய பேர் என்னை வாழ்த்தியதில் ரொம்ப சந்தோசம்(வாழ்த்தினாங்களா இல்லை கும்மினாங்களா?). இவ்ளோ நண்பர்களை சம்பாத்திததில் மிக்க மகிழ்ச்சி(ங்கொய்யால என்ன சொன்னாலும் கும்முவோம்ன்னு நீங்க சொல்றது நல்லா கேக்குது). நம்ம பாசக்கார பசங்களோட லிங்க் போய் பாருங்க. எப்படியோ என்னால நாலு பேருக்கு நல்லது நடந்தா சரிதான்(நாலு பேரு என்னை வச்சி ஒரு பதிவ ஓட்டிடாங்க). அப்பாட நானும் ஒரு பதிவ ஓட்டிட்டேன்.

http://terror-pandian.blogspot.com/2010/09/blog-post_08.html
http://arunprasathgs.blogspot.com/2010/09/blog-post_08.html
http://gokulathilsuriyan.blogspot.com/2010/09/plan.html
http://imsaiarasan-babu.blogspot.com/2010/09/blog-post_07.html

சனி, செப்டம்பர் 4

காதல் ரசம்

நான் முதன் முதலா கவிதைன்னு நினச்சி கொஞ்சம் எழுதுறேன். இந்த கவிதை காதலர்கள், கவிஞர்கள் இன்னும் குத்தம் கண்டு பிடிக்கனும்னே சுத்திக்கிட்டு இருக்குறவங்க யாராவது இதை குத்தம் சொல்லி என் மானம் ரோசத்தை உசுப்பேத்தி விட்டீங்கன்னா அப்புறம் நான் ரொம்ப கோவப்பட்டு இதை விட கேவலமா கவிதை எழுதி கொல்லுவேன் என்பதை வெறித்தனமாக கூறிக் கொல்கிறேன்.

நான் உன்னை
காதல் ரசம் சொட்ட சொட்ட
காதலிக்கிரேனே
உங்கப்பன் கிட்ட சொல்லி
பெருங்காயத்தை குறைக்க கூடாதா!!(ங்கொய்யால என்ன அடி)
=======================
நீ ஸ்கூட்டியில் போகிறாய்..
கொள்ளை அழகு..!!!
அந்த ஸ்கூட்டி...
=====================
எனக்கு பஞ்சு மெத்தை வேண்டாம்
பாய் தலையணை வேண்டாம்
கட்டியணைக்க காதலி வேண்டாம்
உண்பதற்க்கு பழைய
பேப்பர் போதும்
--- இப்படிக்கு கழுதை...
=====================
அன்று:
குத்து பாட்டுக்கு ஆடினால் கல்லூரியில் சஸ்பெண்டு - கல்லூரி முதல்வர்
இன்று:
குத்து பாட்டுக்கு ஆடினால் வரிவிலக்கு - தமிழக முதல்வர்
=====================
கம்ப்யூட்டரில் இங்கிலிஷ்ல எதாச்சும் எழுதினா- வெட்டி பயல்
கம்ப்யூட்டரில் தமிழ்ல எதாச்சும் எழுதினா - பிரபல பதிவர்
=====================
.
.
.

வியாழன், செப்டம்பர் 2

பதிவுலகம் வரமா? சாபமா?

வரமே:

1 . அருண் மாதிரி தமிழ் இல்லாத காட்டுக்குள்ள(தண்ணி இல்லாத காடுதான் இருக்கனுமா) இருந்தா பொழுது போறதுக்கு இலவசமா கிடைக்கிறது பதிவுலகம் ஒண்ணுதான்.

2 . ஆபீஸ்ல ஆணி இல்லாதப்ப போரடிச்சா வேற வழியே இல்லை. பதிவுலகம்தான் பொழுதுபோக்கு.

3 . சிரிப்பு போலீஸ் மாதிரி இலக்கியவாதிகளோட படைப்புகள் மக்களுக்காகவே இலவசமாக கிடைக்க கூடிய இடம் பதிவுலகம்தான்(காசு கொடுத்து எவன் படிக்கிறது)

4 . அடுத்தவங்கள கலாய்க்கிரதுலையும் ஒரு சந்தோசம்தான். நேரடியா யாரையும் கலாய்க்க முடியாது. பதிவுலகுல நமக்கு பிடிக்காதவங்களை நல்லா கலாய்க்கலாம்.

5 . நமக்கு வேண்டாத நண்பர்கள் இருந்தா சில பிரபல பதிவர்களோட பதிவை படிக்க சொன்னா அதுக்கப்புறம் அந்த நண்பர்கள் தொல்லையே நமக்கு கிடையாது...

6 . மொக்கை படத்தையும் பார்த்து விமர்சனம் பண்றதுக்கு ஆளு நிறைய இருக்குறதால அந்த மாதிரி படம் பாக்காம நமக்கு பணம் மிச்சமாகும்(ஆனா என்ன அந்த மொக்கை விமர்சனத்தையும் நாம படிச்சாகணும்)

7 . நிறைய பதிவர்கள் பதிவை படிச்சு நம்ம தமிழ் அறிவை வளர்த்துக்கலாம்(சத்தியமா நான் டெரரை சொல்லலை)

8 . சார் நீங்கதான அந்த பிரபல பதிவர்ன்னு மக்கள் கிட்ட இருந்து ஆட்டோகிராப் கேட்டு வர்றத்துக்கு சான்ஸ் உண்டு(நீதான அந்த மொக்கை பதிவர்ன்னு அடி பின்னாம இருந்தா சரிதான்).

சாபமே:

1 . ஆபீஸ்ல சிரிப்பு போலீஸ் மாதிரி பிரபல பதிவர்களின்(!!!!????) பதிவை படிக்கும்போது மெய்மறந்து ஆணியை மறக்கும்போது நம்ம மேலதிகாரி figure முன்னாடி கேவலமா திட்டுவாரே. இந்த அவமானம் தேவையா? கண்டிப்பா பதிவுலகம் தேவையா?

2 . பாக்குற நண்பர்கள்கிட்ட எல்லாம் என் பதிவை படின்னு சொல்றதால நட்பு வட்டம் குறைஞ்சிடும்(பின்ன எவன்கிட்ட கடன் வாங்குறது)

3 . அனானின்னு ஒரு நோய் தாக்குறதுக்கு வாய்ப்புகள் அதிகம்.

4 . சோறு தண்ணி மறந்து பதிவுலகுல ஒன்றிப் போறதால வீட்டுல கேவலமா திட்டு விழும்.

5 . பன்னை கொடு ரொட்டிய கொடுங்கிறமாதிரி ஓட்டு போட்டியா, கமெண்ட் போட்டியான்னு  அப்டின்னு மெசேஜ் வந்துக்கிட்டே இருக்கும்(இதுல எந்த உள்குத்தும் இல்லை)

புதன், செப்டம்பர் 1

விருதுகள்


1 . Shorthand சக்கரவர்த்தி விருது - ஜெய் அண்ணன்(பதிவை எழுதச் சொன்னா ரெண்டு குயர் நோட்ல எழுதுறதால)

2 . செந்தமிழ் செல்வன் விருது - டெரர் (அழகான தமிழில் எழுதுவதால்)

3 .  செந்தமிழ் செல்வி விருது - காயத்ரி (அழகான தமிழில் எழுதுவதால்)

4 . சிரிப்பு போலீஸ் சிறப்பு விருது - சித்ரா (ha  ha ha ha  என கமெண்ட் போடுவதால்)

5 . வரும் ஆனா வராது விருது - பட்டாபாட்டி (நேர்ல பாக்கலாம்னு சொன்னா வரேன்னு சொல்லிட்டு கரெக்டா வர்றதால)

6 . செவன் ஓ கிளாக் செல்வராசு விருது - கோமாளி செல்வகுமாருக்கு

7 . ஆற்காடு வீராசாமி விருது - பன்னிக்குட்டி ராமசாமி (நம்ம ஊரு கரென்ட் மாதிரி எப்பவாச்சும் வந்து பதிவு போடுறதால)

8 . ஓமகசீயா விருது - Warrior தேவா அண்ணன் (ஓமகசீயாவுக்கு என்ன அர்த்தம்னு தெரிஞ்சிட்டா இவரோட பதிவுக்கு அர்த்தம் சீக்கிரம் புரிஞ்சிடும்)

9 . உள்ளேன் அய்யா விருது - அருண் (பிரேக் ன்னு பதிவு போட்டும் யாரும் கூப்பிடலைன்னு  தெரிஞ்சு அவசர அவசரமா ஓடி வந்ததால)

10 . ஏதோ இருக்கேன் விருது - இம்சை அரசன் பாபு (நானும் பதிவுலகில் இருக்கேன்னு சொல்றதுக்காக அப்பப்ப வந்து ஏதோ ஒரு பதிவு போடுறதுக்காக)

விருதுகள் தொடரும்......

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது