Horoscope

சனி, பிப்ரவரி 26

பிரபல பதிவரின் ஏமாற்று வேலை-ஒரு பதிவரின் கண்ணீர் கதை

 (அருண்,நரி,ஜெய், பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ்)

நேத்து சூரியனின் வலைவாசல் அருண் போன் பண்ணி இன்னிக்கு சென்னைல நாம மீட் பண்ணலாம்ன்னு சொன்னார். நண்பர்கள் எல்லோரையும் கூப்பிடுங்கன்னு சொன்னார். ஆகா இந்த மாச கோட்டாவுக்கு ஓசி சோறு கிடைக்க போகுதேன்னு ஆசைப்பட்டு சரின்னு சொன்னேன். நம்ம நண்பர்களுக்கு போன் பண்ணி சொல்லிடுங்கன்னு சொன்னார். 

(அருண்,ஆயிரத்தில் ஒருவன் மணி)

நானும் மங்குனி, பனங்காட்டு நரி,ஆயிரத்தில் ஒருவன் மணி, பட்டிக்காட்டான் ஜெய் எல்லோருக்கும் போன் பண்ணினேன். நம்ம வீடு வசந்தபவனில் மீட் பண்ணுவோம்னு சொன்னதுக்கு மங்குனி வெஜிடேரியன்னா நான் வரலைன்னு சொல்லிட்டாரு(தொல்லை விட்டது).
(ஜெய், பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ்)

மதியம் ஒருமணிக்கே போயிட்டேன்(ஓசி சோறுன்னா சீக்கிரமே போகணும்ல). பத்து நிமிசத்துல ஜெய் அண்ணன் வந்தார். அப்புறம் ஆயிரத்தில் ஒருவன் மணி, அருண் பிரசாத் வந்தனர். நரிக்கு போன் பண்ணினேன். எங்கடா இருக்கேன்னு கேட்டதுக்கு "மச்சி நீ எப்படியும் சாப்பாட்டுக்கு காசு தர மாட்ட. எங்கிட்டயும் காசு இல்லை. அதான் வடபழனி கோவில் வாசல்ல உக்கார்ந்திருக்கேன். கலெக்சன் ஆனதும் வரேன்" அப்டின்னு சொல்லிட்டான்(நண்பேண்டா).
(நரி)

அரைமணி நேரம் கழித்துதான் நரி வந்தான். எல்லோரும் சாப்பிட்டோம். இடையில் பிரபல பதிவர், பதிவுலக பன்னாடை சீ பகலவன், அஞ்சா நெஞ்சன், துபாய் மானம் காக்கும் மகான் டெரர் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டோம். ஆனால் அந்த நேரம் அவர் யாருடன் தொடர்பில் இருந்தார் என்று சத்தியமா எனக்கு தெரியாது.

 (அருண்,நரி,ஜெய், பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ்)

பில் வந்தது. வழக்கம் போல யாராவது கொடுப்பாங்க அப்டின்னு நினைச்சேன். நரி "மச்சி எனக்கு கலெக்சன் ஆகலை. காசும் இல்லை" அப்டின்னு சொல்லிட்டான். ஆயிரத்தில் ஒருவன் மணிகிட்ட வாங்க முடியாது(பாவம் பலியாடா வந்து மாட்டிக்கிட்டாரு). ஜெய் அண்ணன் பர்சையே எடுத்துட்டு வரலை.

அருண் "என்கிட்டே மொரிசியஸ் ரூபா தான் இருக்கு" அப்டின்னு சொல்லிட்டாரு. எப்பவுமே வராத சூடு, சுரணை,கோவம்,ரோசம் எனக்கு வந்திட்டது(சாப்பாட்டுல உப்பு அதிகமோ?). சடார்ன்னு என் வேலிட் கிரெடிட் கார்டை எடுத்து வைச்சிட்டேன். கூடவே பீடா செலவு வேற. இன்னிக்குன்னு பார்த்தா எனக்கு கோவம் வரணும். போச்சே போச்சே பணம் போச்சே.
(நான் வாங்கி கொடுத்தாதா யாராச்சும் நம்ம்புவாங்களா?)

மொரிசியஸ்ல இருந்து சென்னை வந்து என்னை ஏமாற்றிய பிரபல பதிவர் அருண் பிரசாத்தை வன்மையாக கண்டிக்கிறேன். இதையே முன் உதாரணமாக வச்சு இனி வர்றவங்க ஓசி சோறு வாங்கி தரலைன்னா என் நிலைமை என்ன ஆவுறது. என் சோக கதைய கேளுங்க பதிவர்களே. இந்த அருணை என்ன பண்ணலாம்?

வயசுல பெரியவங்க அருணும், ஜெய்யும் ஒரு அப்பாவி குழந்தை பதிவரை ஏமாற்றி கண்ணீர் வரவைத்த செயல் கண்டு பதிவுலகமே பரபரப்பாக இருக்கிறது.
..

திங்கள், பிப்ரவரி 21

" உலக கோப்பை சவால் " - பரிசு போட்டி..!

முஸ்கி: டிஸ்கியை படிக்கவும்.
இது கிரிக்கெட் ரசிகர்களுக்காக
VAS & VKS இணைந்து வழங்கும்
மாபெரும் ( மாசிறும்.?! ) பரிசுப்போட்டி..!!

உலக கோப்பை ஆரம்பிச்சாச்சுல்ல

முதல்ல இந்த பரிசு போட்டியை
VAS மட்டும் தான் நடத்தறதா இருந்தது..
ஆனா VKS-ம் சேர்த்துக்க 2 காரணம்

1. இதுல VKS ரொம்ப ஆர்வமா இருந்தாங்க.

2. எங்களை விட அதிகமா பரிசு Sponser
பண்றேன்னு வேற சொன்னாங்க.
( So., சூடு சுரணை எல்லாம் விட்டுட்டு
அவங்க நல்ல மனசை பாராட்டி சேர்த்துக்க
வேண்டிதா போச்சு)

போட்டி என்னான்னா..

உலககோப்பை லீக் ரவுண்ட்ல ஒரளவு
சமபலம் பொருந்திய Teams மோதும்
15 Matches இங்கே கொடுத்து இருக்கோம்..

இந்த Matches-ல யார் Win பண்ணுவான்னு
நீங்க கணிச்சு எங்களுக்கு கமெண்ட்ல
போடணும் அவ்ளோ தான்..

நீங்க கணிக்க வேண்டிய Matches..

1. Feb 24 - South Africa Vs West Indies

2. Feb 25 - Australia Vs New Zealand

3. Feb 26 - Sri Lanka Vs Pakistan

4. Feb 27 - India Vs England

5. Mar 04 - Bangladesh Vs West Indies

6. Mar 05 - Sri Lanka Vs Australia

7. Mar 06 - England Vs South Africa

8. Mar 07 - Kenya Vs Canada

9. Mar 08 - Pakistan Vs New Zealand

10. Mar 12 - India Vs South Africa

11. Mar 17 - England Vs West Indies

12. Mar 18 - Sri Lanka Vs New Zealand

13. Mar 18 - Ireland Vs Netherland

14. Mar 19 - Australia Vs Pakistan

15. Mar 20 - India Vs West Indies


விதிமுறைகள் :

1. ஒரு சரியான விடைக்கு ஒரு Point.
So., அதிக Points எடுத்தவர் Winner..

2. Winner-க்கு Rs 900 மதிப்புள்ள
ஒரு Surprise Gift VAS & VKS
சார்பா வழங்கப்படும்...!!
( பரிசு மதிப்பு அதிகமாகவும்
வாய்ப்பு உண்டு..! )

3. ஒருவருக்கு மேற்பட்டவர்கள் சமமான
Points எடுத்து இருந்தா.. Prize பகிர்ந்து
அளிக்க படும் ( or ) Winner குலுக்கல்
முறையில் Select செய்யப்படுவார்..

4. கணிப்பு Comment-போடுவோர்.,
அவர்கள் Mail ID-ஐ அடுத்த Comment-ஆக
போடவும்., ( கணிப்பு Comment மட்டும்
Publish செய்யப்படும்.. )

5. இந்தியாவுக்குள் மட்டுமே Prize அனுப்படும்.
வெளிநாட்டில் இருப்பவர் வெற்றி பெற்றால்
அவர் சுட்டிகாட்டும் இந்தியாவில் இருக்கும்
நபருக்கு பரிசு அனுப்படும்.!!

6. Last Date : FEB 24 , மதியம் 12 மணி.

7. 15 கணிப்பையும் ஒரே Comment-ல்
போட வேண்டும்..

8. ஒரு ID-க்கு ஒரு கணிப்பு மட்டுமே
ஏற்றுக்கொள்ளப்படும். ( ஒரு கணிப்புக்கு
மேல் அனுப்பினால்.. கடைசியாக வரும்
கணிப்பை எடுத்துக்கொள்வோம் )

9. Anony Comment ஏற்றுக்கொள்ளபடாது.

10. போட்டியில் VAS & VKS சேர்ந்தவர்களும்
கலந்து கொள்ளலாம்.

11. இந்த பதிவில் கும்மி Avoid செய்யவும்.
வேறு சந்தேகங்கள் இருப்பின் கேட்கலாம்.

டிஸ்கி: இது வெங்கட்டோட பதிவு.  அங்கு கும்மிக்கு அனுமதி இல்லை. வெங்கட்டை கலாய்ப்பவர்கள் இங்கு கலாய்க்கலாம்.No Comment moderation. Enjoyyyy. உண்மையாக போட்டியில் கலந்து கொள்பவர்கள் வெங்கட் ப்ளாக் செல்லவும்.
..

வெள்ளி, பிப்ரவரி 18

நண்பர்கள்ன்னு சொல்லிக்கவே வெட்கமா இருக்கு

நான் உண்டு என் வேலை உண்டு, என் ப்ளாக் உண்டுன்னு நிம்மதியா இருந்தேன். எவன் கண்ணு பட்டதோ தெரியலை. அடுத்தவன் காசுல சாப்பிட கூட நேரம் இல்லை. அவ்ளோ வேலை இப்போ. வீட்டுக்கு வந்து ப்ளாக் பக்கம் வரலாம்னு பார்த்தா வேளச்சேரி ஏரியாவுல ரோடு அகலப்படுத்துறேன்னு சொல்லி நைட் BSNL Connection Wire-ரையும் சேர்த்து கட் பண்ணிடுறாங்க.

ஒரு வாரமா வீட்டுலையும் நெட் சரியா வேலை செய்யலை. சரி ஒரு பிரபல பதிவரின் வளர்ச்சியை தடுக்க கவர்மெண்டே சதி செஞ்சா என்ன பண்ண முடியும்.

ரெண்டு நாளைக்கு முன்னாடி என் நண்பன் துபாய்ல இருந்து இந்தியா வந்தான். அவனோட Engagement-க்கு. இன்னிக்கு ட்ரீட் தர்றேன்னு சொன்னான். சரி இன்னிக்கு ராத்திரி ஓசி சாப்பாடு சாப்பிடலாம்னு மதியத்திலிருந்து ஒண்ணுமே சாப்பிடலை. 

இன்னிக்கு காலைல இன்னொரு நண்பன் "எனக்கு பிரமோசன் கிடைச்சிருக்கு. ட்ரீட் தர்றேன். ராத்திரி வாடா" அப்டின்னு போன் பண்ணினான். 

நான்: இல்லடா என்னோட இன்னொரு பிரண்டு பாரின்ல இருந்து வந்திருக்கான் அவனோட ட்ரீட் இன்னிக்குன்னு 

பிரண்டு: அப்டின்னா உள்ளூர்காரன் கூப்டா வர மாட்ட அப்டித்தான?

நான்: இல்லடா. நாம எப்ப வேணாலும் மீட் பண்ணிக்கலாம். அவன் பாரின்ல இருந்து வந்திருக்கான். பாரின் சாக்கலேட் கிடைக்கும். சென்ட் பாட்டில் வேற தருவான். அதான். ஹிஹி

பிரண்டு: கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். தூதூதூதூதூதூதூதூதூதூதூதூ(Just miss)..

நான்: விடு விடு. இன்னொரு நாள் ட்ரீட் கொடு

பிரண்டு: இன்னிக்கு வந்தா வா. இல்லைன்னா ட்ரீட் கிடையாது.   

சரி அங்க போய் சாப்பிட்டு இவன் ட்ரீட்டுக்கு நாளைக்கு வருவோம்னு பார்த்தா இன்னிக்கு நைட் இவன் துபாய் கிளம்புறான். 

அட பாவிகளா. நான் என்ன பண்றது சார். ரெண்டு பயபுள்ளைகளும் ஒரே நாள் ட்ரீட் கொடுத்தா நான் எப்படி சாப்பிடுறது. நண்பர்களா சார் இவனுக. ஒரு நண்பனுக்கு ஒரே நாள் ரெண்டு பேர் ட்ரீட் கொடுத்தா எப்படி சாப்பிட முடியும்னு யோசிக்க மாட்டானுக? 
அநியாமா ஒரு ஓசி சாப்பாடு போச்சே. அவ்வ்வ்வ்வ்வ்வ்..

டிஸ்கி: அடுத்த மாசம் என் பிரண்ட்ஸ் ரெண்டு பேருக்கும் ஒரே நாள்ல கல்யாணம். ரெண்டு பயலுகளும் சேர்ந்தே ட்ரீட் கொடுக்க போறானுகலாம். நான் மட்டும் ரெண்டு கல்யாணத்துலையும் தனித்தனியா மொய் வைக்கணும்(எப்படியும் அந்த கிழிஞ்ச ரெண்டு பத்து ரூபா நோட்டுகளையும் மொய்ல தள்ளிடனும்). ஆனா அவனுக ரெண்டு பெரும் சேர்ந்து ஒரே ட்ரீட் தான் கொடுப்பாங்களாம். இவனுகளை என் நண்பர்கள்ன்னு சொல்லிக்கவே வெட்கமா இருக்கு. இதை கண்டித்து ஒரு போராட்டம் பண்ணலாம்னு இருக்கேன். நீங்க என்ன சொல்றீங்க?
...

புதன், பிப்ரவரி 16

மளிகைக் கடை பாக்கி

பிஸ்தா(உடல் ஆரோகியத்துக்கு)- Rs.465
பாதாம்(உடல் வலிமைக்கு)- Rs.760
பேர் அண்ட் லவ்லி(அழகுக்கு) -Rs. 120
அரிசி(சோத்துக்கு)- Rs.900
கடலை பருப்பு(சத்தியமா கடலை போட இல்லை)- Rs.400
வெங்காயம்(நாங்களும் பணக்காரன்னு காட்டனும்ல)- Rs.300
கடலை எண்ணெய்(இதுவும் சத்தியமா கடலை போட இல்லை)-Rs.320
நல்லெண்ணெய்(நானும் ரொம்ப நல்லவன்)-Rs,.430
முட்டை(பதிவுலகில் சில கூமுட்டைகளை அழிக்)-Rs.300
அப்பளம்(எதிரிகளை அப்பளமாக நொறுக்க)-Rs.45
பழைய பாக்கி - Rs.3450
Total: Rs.7490/-

இதுதான் என்னோட போன மாச மளிகை கடை பாக்கி. 2010-2011 வருட கணக்கு முடிக்கிறதால tax-லையே என்னோட சம்பளம் போயிடுச்சு. அதனால இந்த மளிகை கடை பாக்கிய(பாக்கியத்தை இல்லை) என் ஆருயிர் நண்பன் டெரர் அவர்கள் செட்டில் செய்வார்கள் என்பதை பதிவுலகிற்கு எருமையுடன் பெருமையுடன் தெரிய படுத்திக் கொள்கிறேன்.

டிஸ்கி 1 :டெரர் பஸ்சா போடுற? நீ போட்ட பஸ்க்குத்தான் இந்த பதிவு. இந்த பதிவு மொக்கைன்னு சொல்றவங்க உன்னை காறி துப்பட்டும்.

டிஸ்கி 2 : டெரர் போட்ட பஸ்:

Terror Pandian - Buzz - Public - Muted
ஊசி போன பாரிக் ரைஸ்சா இருந்தாலும் ஊருக்கா வச்சி சாப்பிட்டா உற்சாகமா தான் இருக்கு.

விளக்கம் : ஊர சுத்திட்டு வந்து. மிஞ்சி போன ரைஸ் வாங்கிட்டு ஹோட்டல்காரன குத்தம் சொல்லி புண்ணியம் இல்லை.. :(



Terror Pandian - அட நீங்க வேற எஸ்.கே சாப்பிட்டு முடிச்சிடேன்... ரைஸ் ஊசி போச்சி, புதுசா ஆர்டர் பண்ண வர 30 மினிட்ஸாகும், பசி வேற. அதானால அதையே ஊருக்கா வச்சி சாப்பிட்டேன். இதை பதிவா போட்டா எனக்கும் ரமேசுக்கும் என்ன வித்தியாசம். அதான் பஸ் போட்டேன்...
 
எஸ். கே - முடிஞ்ச வரை இவ்வளவு லேட்டா சாப்பிடறத மாற்ற முயற்சி பண்ணுங்க! உங்க உடம்புக்கு நலது!
 
எஸ். கே - வலைப்பூ என்பதே டைரி மாதிரி நமக்கு பிடிச்சதை எழுதுறதுக்கு ஆரம்பிக்க பட்டதுதானே! (அவர் மளிகைகடை பாக்கி எழுதாத வரைக்கும் சந்தோசப்படுங்க!:-))))


டிஸ்கி 3 : ஊசி போன சாப்பாடு தின்ன உனக்கே இவ்ளோ இருந்ததுன்னா தினமும் வித விதமா ஓசி சோறு சாப்புடுற எனக்கு எப்படி இருக்கும். நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?

..............

ஞாயிறு, பிப்ரவரி 13

காதலர் தின வாழ்த்துக்கள்- எச்சரிக்கை

அன்பே
ஆருயிரே
இந்த வருசமாவது
ஈட்டி குத்தியது போல் வலிக்கும் என் மனது
உன்னோடு 
ஊஞ்சல் ஆடிக்கொண்டு சந்தோசமாக இருக்க
என் மனது
ஏக்கம் கொண்டு
ஐலேசா பாடுகிறது
ஒரு நாள் என்னுடன் காதலாகி
ஓடி வருவாய் என்ற நம்பிக்கையுடன்
ஓளவையார் எழுதிய ஆத்திசூடியுடன்(காதலிக்கும்போது இது எதுக்கு. ஓள-ல தமிழ்  வார்த்தை எதுவுமே இல்லியா?. அவ்வ்வ்வ்வ்வ்வ்)
காத்திருக்கும் அன்புக்காதலன்

-- ரமேஷ்

டிஸ்கி 1: காதலர் தினம் கொண்டாடும் காதலர்களுக்கேல்லாம் காதலர் தின வாழ்த்துக்கள் (!!!ஸ்டமக் பர்னிங்)

டிஸ்கி 2: பன்னிகுட்டி, டெரர், பாபு நல்லா சிரிங்கடா சிரிங்க. அடுத்த வருஷம் நானும் காதலர் தினம் கொண்டாடுவேண்டா..

டிஸ்கி 3: இது ஒரு காலத்துல இந்திரா அழைத்த தொடர்பதிவுக்காக எழுதினது. அப்பாடி ஒரு வேலை முடிஞ்சது.
...

வியாழன், பிப்ரவரி 10

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு

இவரை பத்தி எழுதனும்னா  ஒரு கண்டைனர் நிறையா பேப்பரும் பேனாவும் வாங்கணும். பதிவு எழுதுங்கன்னு சொன்னா 40 பக்கத்துக்கு எழுதுறவரு. சரியான பட்டிக்காட்டானுங்க இவரு. பாவம் நரி கூட சேர்ந்து பிளாக் அட்ரஸ் மறந்துட்டாருன்னு நினைக்கிறேன். ப்ளாக் பக்கமே வர்றதில்லை.

இன்னிக்கு அவருக்கு பிறந்த நாளுங்க. எல்லோரும் அவர் மறுபடியும் ப்ளாக் எழுத  வந்திடக் கூடாதுன்னு வரணும்னு வேண்டி அவரோட பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லிக்குவோம்.

அவர்தான் பிரபல பதிவர் பட்டிக்காட்டான் ஜெய் அண்ணா.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜெய் அண்ணா....
....

செவ்வாய், பிப்ரவரி 8

தொழிலாளி.... கிர்ர்ர்ர்ர் (எதிர் பதிவு)

இந்த பதிவு இதற்கு எதிர்பதிவு..

கடவுள் படச்சதுல மிக அற்புதமான விஷயம் தொழிலாளி. எதுவுமே தெரியாம எல்லாம் தெரிஞ்ச மாதிரி நடிக்கிறதுனா சும்மாவா? காலையில எழுந்து பொண்டாட்டி கிட்ட திட்டு வாங்கரது. அதே கோவத்துல பஸ்ல ஏறி உக்கார்றது.வர வழி எல்லாம் ஆபிஸ்ல இன்னிக்கு எப்படி வேலை செய்யாம ஓப்பி அடிக்கலாம்னு யோசிக்கிறது.

உள்ள வந்ததும் ஒரு புத்திசாலி மேனேஜர் ஒரு வேலை கொடுப்பாரு. அதை செய்ய ஆரம்பிக்கிறதுகுள்ள அரைமணி நேரம் டீ பிரேக் போயிடுவாங்க. அடுத்த அரை மணி நேரம் சிகரெட் பிடிக்க கிளம்பிடுவாங்க. சரி சீட்டுக்கு போங்க அப்டின்னு மேனேஜர் சொல்லுவாரு.

அடுத்த அஞ்சி நிமிஷத்துல(அவங்க சீட்டுக்கு வந்து உக்காரும்போதே ரெண்டு மணி நேரம் முடிஞ்சிருக்கும்)ஏங்க அந்த வேலை முடிஞ்சிதா அப்டின்னு மேனேஜர் கேட்பாரு. அப்போ கேனத்தனமா சிரிப்பாங்க பாருங்க அப்போ வரும் கோவம்... ஏண்டா நாயே நீ எல்லம் உயிரோட இருந்து என்னடா பண்ற அப்படினு கேக்கனும் போல நாக்குல வார்த்தை வந்து நாட்டியமாடும்(சீட்டுல வந்தும் வேலை செய்யாம அரசியல், சினிமான்னு கதை பேசியே ரெண்டு மணி நேரம் போயிடும்).

சின்ன லெவல்ல இருந்து நல்ல படியா படிப்படியா படிச்சு  வேலைக்கு வந்தவன் எல்லாம் ரொம்ப ஏமாத்த மாட்டான். ஆன குத்து மதிப்பா படிச்சி பிட்டடிச்சு BE பாஸ் பண்ணி முடிச்சிட்டு எவனாவது சொந்தக்காரன்  ரெகமேண்டேசன்ல வந்து வேலைக்கு சேர்ந்து இருப்பாங்க பாருங்க அவங்க அட்டகாசம் தாங்க முடியாது.

அவங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் எவளாவது வாயில நுழையாத ஒரு இங்கிலீஷ் சினிமா நடிகை பேர சொல்றது(தமிழ் சினிமா பார்க்க மாட்டானுகலாம். ஒன்லி இங்கிலீஷ் படம்தான்) அந்த ஹீரோயின் எவ்ளோ அழகா இருக்கா தெரியுமான்னு கேட்டு நம்ம உயிர வாங்கரது. அந்த லூசு பிகரு எப்படி இருந்தா எனக்கு என்ன?

அப்படி என்னடா அந்த நடிகை நடிச்சிருக்கான்னு கேட்டா, வித்தியாசமா நடிச்சிருக்காங்க அப்டின்னு சொல்லுவான். இது நம்ம ஊர்ல இருக்க சாதரண நடிகை கூட வித்தியாசமாத்தான் நடிக்கிறாங்க. அதே மாதிரி வர்ற தமிழ் படத்தை விட்டுட்டு இங்கிலீஷ் படத்தை சத்யம் தியேட்டர்ல Rs.200 கொடுத்து பார்த்துட்டு வந்து வெட்டியா சீன் போடுவானுக.

அது மாதிரி எப்பவுமே வெட்டியா இருந்துட்டு மீட்டிங் வச்சா அந்த நேரத்துல செல்போன்ல பிகர்கிட்ட வெட்டியா எதாவது பேசும். "போன வாரம் ஏன் நீ பீச்சுக்கு வரலை?இந்த வாரம் படத்துக்கு போகலாம். சாரிடா செல்லம்." ஏண்டா காலைல இருந்து ஒரு வேலை பார்க்கலை அப்டின்னு மீட்டிங் வச்சா பிகரோட கடலை போடுவானுக. பின்ன மேனேஜர்க்கு கோவம் வந்து பேச ஆரமிச்சா நீ பி.பி ஏறி செத்து போய்டுவடா அப்படினு மனசுகுள்ள நினைச்சி நம்ம பி.பி தான் ஏறும்.

என் நண்பன் மாலுமி சார்பா உங்களுக்கு ஒன்னு சொல்றேன். வேலை கொடுத்தா மேனேஜர் கிட்ட முழு விபரம் கேளுங்க. அரை குறையா டீடேய்ல் கேட்டுக்க வேண்டியது அப்புறம் தப்பா வேலைய செஞ்சிட்டு அப்பாவி மேனேஜரை மனசுக்குள்ள திட்ட வேண்டியது. எப்போ தான் சரியா சொல்லுவீங்கன்னு சொல்லி கேள்வி வேற. நீ எப்போதாண்டா உனக்கு என்னா டீடைல்ஸ் வேணும்னு மேனேஜர் கிட்ட சரியா கேட்டு தெரிஞ்சுக்குவ? அப்ரைசல் டயத்துல மட்டும் எப்படிடா கரெக்டா வேலை செய்யுறீங்க?


இந்த அப்ரைசல் அப்படின்ற விஷயத்த எந்த மகான் கண்டு பிடிச்சாரு தெரியவில்லை. அவரு பாவம் வேலை செய்யரவன திறனாய்வு பண்ணி அதுக்கு தகுந்த மாதிரி ஊதிய உயர்வு, பதவி உயர்வு கொடுக்க அவரு கண்டு பிடிச்சாரு. ஆன இந்த சாவுகிராக்கிங்க அதை அப்பாவி மேனேஜர்க்கு ஜால்ரா போடற வேலை எல்லாம் செய்யுது. மேனேஜர் சார் டீ சாப்டீங்களா. காப்பி சாப்டீங்களா. சிகரெட் வேணுமான்னு வழிய வேண்டியது. இந்த பாசம் எல்லாம் இவ்ளோ நாள் எங்கடா போச்சு. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பா.....


இந்த லூசுகளுக்கு கீழ ஒரு சின்ன லூசு(ஜூனியர்ஸ்) இருக்கும் இந்த லூசு மாச மாசம் அந்த லூச கூப்பிட்டு ரிப்போர்ட் கேக்கும். சின்ன லூசு கரைக்டா ரிப்போர்ட் கொடுக்க பெரிய லூசு பேர மட்டும் நோட்டுல எழுதும் (இது எதோ பெருசா நோட்ஸ் எடுத்து கிழிக்கிது அது சந்தோஷபடும்). பெரிய லூசு, மேனேஜர் கிட்ட வந்து என்னவோ அதுவே யோசிச்சு எழுதின மாதிரி சீன் போடும். நல்ல ரிபோர்டா இருந்து மேனேஜர் பாராட்டினா ஹிஹின்னு பல்லை இளிக்கும். ரிப்போர்ட் மோசமா இருந்தா இது ஜூனியர்ஸ் பண்ணினது அப்டின்னு சொல்லி அவங்க மேல பழியை போடும்.


டெரர் : ஏண்டா நாயே, பரதேசி இது எல்லாம் ஒரு பொழப்பாடா உனக்கு. ஆபீஸ் வர வேண்டியது. பிகர் கூட கடலை போட வேண்டியது. ஏன்டா வேலை செய்யலைன்னு மேனேஜர் கேட்டா அவனை திட்ட வேண்டியது (இவன் ஒரு கம்பனில அடிமாடா இருக்கான்)


டிஸ்கி : சில நல்ல திறமையுள்ள தொழிலாளிகள் இருக்கலாம்(என்ன இருக்கலாம் டெரர் தவிர எல்லோரும் திறமையானவர்கள்தான்) அவர்களுக்கு திட்டு விலக்கு அறிவிக்க படுகிறது...
...

சனி, பிப்ரவரி 5

சிங்கப்பூர் பதிவர்களின் அட்டகாசம்


நேத்து நம்ம உளவுத்துறை(விஜயகாந்த் படமா?) போன் பண்ணி சிங்கை பதிவர்கள் பற்றிய சில தகவல்களை கொடுத்தனர். அமெரிக்ககாரங்க இந்தியா மாணவர்கள் கால்ல ஏதோ மிசின் மாட்டுன மாதிரி துப்பறிவதற்காக நம்ம மாணவன் கால்ல ஒரு மிசின மாட்டுனோம். நேத்து அவங்க பண்ணின அட்டகாசம் இருக்கே. அப்பப்பா..

இப்போ சிங்கையில் சைனீஸ் நியூ இயர். அதனால் அங்கு ஐந்து நாள் லீவ். வியாழக்கிழமை இரவு ஆபீஸ்ல இருந்து கிளம்பும்போது மாணவன் அவரோட மேனேஜர் ரூம்ல இருந்த பத்து சரக்கு பாட்டிலை ஆட்டையை போடும்போது மேனேஜர் கிட்ட மாட்டிக்கிட்டார். அப்புறம் மேனேஜர் கிட்ட நம்ம மாணவன் நான் சரக்கை வச்சிக்கிறேன் என் சைனீஸ் பிகர நீங்க வச்சிகொங்கன்னு சொல்லி டீல் முடிச்சிட்டு எஸ்கேப் ஆகிட்டார்.

வெள்ளிக்கிழமை காலைல வெறும்பய,வைகை,மாணவன் மற்றும் கருணாகரசு ஜூராங் வேஸ்ட் சீ வெஸ்ட்ல இருந்து கிளம்பி செந்தோசா தீவுக்கு போறதுக்காக ட்ரெயின் ஏறினாங்க. ஆனா நம்ம வெறும்பய குழந்தை பசங்களான வைகை,மாணவன் மற்றும் கருணாகரசு மூணு பேரையும் லக்கி பிளாசாவுக்கு கூட்டி கடத்திக்கிட்டு போயிட்டாரு.
வெறும்பயலும், லக்கி பிளாசா பிகரும்

பாவம் மாணவன் அங்க போயி எதையோ பார்த்து பயந்துட்டாப்புல. எது கேட்டாலும் "உங்கள் பொன்னான பணி தொடரட்டும்" அப்டின்னு சொன்னதையே சொல்ல ஆரமிச்சிட்டாரு. பிறகு அபிநயாக்கு போன் பண்ணி பேசினதுக்கு அப்புறம்தான் தெளிவானாரு.
வெறும்பய முழு போதையில்
 
பின்ன எல்லோரும் செந்தோசா தீவுக்கு போனாங்க. அங்க மாணவன் கொண்டு போன சரக்கை முக்கால்வாசி வைகை அவர்களும், மீதி கால்வாசியை வெறும்பயலும் குடித்துவிட்டனர். பாவம் மாணவன் வெறும் மூடியை மோந்து பார்த்து போதை ஏற்றிகொண்டார்.
வெறும்பயலும், அந்த சைனீஸ் பிகரும்(பின்னால் மாணவன்)

அங்கு வைகையிடம் குடிப்பது தப்புன்னு பதிவு எழுதிட்டு இப்படி குடிக்கிறீங்களே நியாமான்னு கேட்டோம். அட போங்கடா வெண்ணைகளா "நானே அந்த பதிவை போதைல இருக்கும்போதுதான் எழுதினேன்". அந்த பதிவு எழுதினதே எனக்கு தெரியாது என்று கூறிவிட்டு மட்டையாகி விட்டார்.

வெறும்பயலோ நன்றாக குடித்துவிட்டு சைனீஸ் பிகருடன் டான்ஸ் ஆட கிளம்பிவிட்டார். அவர் வாழ்வில் ஜோதி ஒளிரட்டும். பாவம் கருணாகரசு பிரபல பதிவர்கள்ன்னு நம்பி இந்த கூட்டத்துல வந்து மாட்டிக்கிட்டாரு. அவருக்கு என் அனுதாபங்கள்.

பிரபல பதிவர், பதிவுலக மாமேதை, பதிவுலக சக்கரவர்த்தி, பதிவுலக டான் Mr.Dr.பட்டாப்பட்டி அவர்களை ஒரு பதிவராக மதிக்காமல் அவரை கூப்பிடாமல் பதிவர் சந்திப்பு நடத்திய வெறும்பய,மாணவன் மற்றும் வைகை அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம் # இப்படிக்கு டாக்டர் பட்டாபட்டியின் கம்பவுண்டர் சங்கம்.

டிஸ்கி 1: என்னடா போட்டோ எல்லாம் இருட்டா இருக்கேன்னு பாக்குறீங்களா. வெறும்பய என் கையை காலா நினைச்சு கெஞ்சினதால அவரோட படங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டது. இருட்டுன்னா கருப்புதான. அதான் போட்டோ கருப்பா இருக்கு.

டிஸ்கி 2: இந்த போட்டோவுக்காக ரெண்டு மணிநேரமா ஜொள்ளுவிட்டு காத்து கிடந்த பன்னிகுட்டி மற்றும் டெரர் ஜொள்ளு வழியிற வாயை துடைக்கவும். ஹிஹி..
...

வெள்ளி, பிப்ரவரி 4

கண்ணா 2 லட்டு திங்க ஆசையா?

பையன் எக்ஸாம்ல பெயில்:

அப்பா: இனிமே என்னை அப்பான்னு கூப்பிடாத.

பையன்: அய்யோ அப்பா இது எக்ஸாம் ரிசல்ட். DNA ரிசல்ட் இல்லை.
======================================
இறந்த பிறகும் சைட் அடிக்கனுமா. ரொம்ப ஈசி. "கண் தானம் செய்யுங்கள்"
======================================
பன்னிக்குட்டி டெரர் கிட்ட "என் லவர் கூட படத்துக்கு போகணும். ரெண்டு கார்னர் சீட் டிக்கெட் எடுத்துட்டு வா" அப்டின்னு சொன்னார்.

டெரர் ரெண்டு கார்னர் சீட் டிக்கெட் எடுத்துட்டு வந்தார்: A1 & A25. டெரர் ராக்ஸ். ஹிஹி
======================================
உன்னோட சட்டைல முதல் பட்டனை
தப்பா போட்டா எல்லா பட்டனும் தப்பா போயிடும்.
தத்துவம் சொன்னது...
.
.
.
.
.
.
டெய்லர் தண்டபாணி
======================================
லவ்வரோட தங்கச்சி நமக்கு missed call
கொடுத்தா இந்த சமுதாயம் என்ன சொல்லும் தெரியுமா?

"கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா?"
======================================
Happy News

இந்த உலகம் 2012-ல கண்டிப்பா அழியாது. ஏன்னா நேத்து வாங்கின தக்காளி ஜாஸ் பாட்டில்ல Expire date 2013 அப்டின்னு போட்டிருக்கு.
======================================
புது சிம் "Spacetel" வந்திருக்கு.
Sim rate: Rs.59
SMS: 20000/ month
Incoming: 1000 calls free/month
GPRS: unlimitted free
Lifetime validity
ஆனா ஒரு கண்டிசன். டவர் நீங்கதான் நட்டுக்கணும்.
======================================
எதிரிகளை தண்டிப்பதோ, மன்னிப்பதோ கடவுளின் வேலை. அதை அவர் பார்த்துக் கொள்வார். எதிரிகளை கடவுளிடம் அனுப்பும் வேலையை மட்டும் நாம பார்த்துக் கொள்(ல்)வோம் .
======================================
ஜெய்ஹிந்த் படத்துல ரஞ்சிதா "கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்துடுச்சுன்னு" பாடினதால நித்யானந்தா அதை தேடும்போது அதை வீடியோ எடுத்து எதிர்கட்சிக்காரர்கள் வதந்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கூறிக் கொள்கிறேன்.

- வக்கீல் வண்டு முருகன்
======================================
மச்சி ரூம்ல இன்னிக்கு என்ன சமையல். சாப்பாடு இருக்கா?
======================================

டிஸ்கி: கடைசில உள்ளது என்ன எழவுடா? ஜோக் மாதிரியும் இல்லை. தத்துவம் மாதிரியும் இல்லைன்னு கேட்குறது எனக்கு புரியுது. என் மொபைல்ல உள்ள எஸ்.எம்.எஸ் எல்லாத்தையும் பார்த்து டைப் பண்ணிக்கிட்டு இருக்கும்போது என் பிரண்டு எனக்கு அனுபிச்ச எஸ்.எம்.எஸ் சையும் சேர்த்து டைப் பண்ணிட்டேன். (நாங்கெல்லாம் பிள்ளையார் சுழிய கூட அடுத்தவன் எக்ஸாம் பேப்பர்ல இருந்து காப்பி அடிக்கிறவங்கலாச்சே. ஹிஹி)
...

வியாழன், பிப்ரவரி 3

சென்னையில் வேலை வாய்ப்பு- Urgent

Profile: Document writing
Skills: Excellent English knowledge(Writing and speaking)
Email: sramesh@emdsys.com
Ph: 9791036735(Chennai)

உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும். 
...

புதன், பிப்ரவரி 2

50-வது நாள்


இளக்காரமா பேசினவங்க, எள்ளி நகையாடியவங்க எல்லோர் முகத்திலும் கரியை பூசி வெற்றிகரமான 50-வது நாளை அடைந்த விருதகிரி எவர் கிரீன் மூவி 1000-மாவது நாளை கொண்டாட வாழ்த்துக்கள்.

விருதகிரி சாதித்தது என்ன?

1. இங்க உள்ள குப்பனும்சுப்பனும் இங்கிலீஷ் பேசி பீலா விடும்போது ஆஸ்திரேலியாகாரனுகளை தமிழ் பேச வைத்த பச்சை தமிழன்: புரட்சி கலைஞர் 

2. கர்ப்பிணி பெண்கள் ஹை ஹீல்ஸ் போட மாட்டாங்க என்ற அறிய தகவலை  ஆஸ்திரேலியாகாரனுகளுக்கு எடுத்துரைத்தவர்: புரட்சி கலைஞர்

3. வெறும் வசனம் எழுதி மட்டுமே இளைஞர்களை கொல்ல முடியும் என்ற கொள்கையை உடைத்து நடித்தும்,இயக்கியும் மக்களை கொல்ல முடியும் என நிருபித்தவர்:புரட்சி கலைஞர் 

4. சொந்த டிவி இருந்தும் விருதகிரி விளம்பரத்தை நொடிக்கொருதரம் போடாமல் மக்களை பாதுகாத்தவர்: புரட்சி கலைஞர் 

5. 10,20,25,50 போன்ற எந்த நாட்களுக்கும் விழா எடுக்காத ஒரே படம் விருதகிரி. காரணம்: புரட்சி கலைஞர்


"பார்ப்பது எந்த படமாக இருப்பினும் ஓடுவது புரட்சி கலைஞர் படமாக இருக்கட்டும்(வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் ரீமேக் ஹிஹி)"

தொடர்ந்து டிவியில் தினமும் ஒரு விஜயகாந்த் படம்:

பேரரசு
சபாஷ்
அன்னை என் தெய்வம்...

தலைவர் ராக்ஸ்...விருதகிரி 1000-நாள் விழாவில் பேசுகிறேன்.
........

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது