Horoscope

வியாழன், செப்டம்பர் 29

பீட்டர்

நான் படிச்சு வளர்ந்த கிராமத்தில் மொத்தம் எழுபது வீடுகள் உண்டு. அந்த ஊரிலையே மிகவும் முக்கியமானவர் ராமசாமி. அந்த காலத்துலயே BA English படிச்ச ஆளு அவர். நம்மிடம் பேசும்போது கூட ஆங்கிலம் கலந்துதான் பேசுவார். அதனாலையே அவருக்கு பீட்டர் என்று பேர் வந்தது. எங்களை போல சின்ன வயசு பசங்களுக்கு அவருடைய உண்மையான பெயர் தெரியாது. பீட்டர்ன்னு சொன்னால் மட்டுமே தெரியும். இருந்தாலும் ஊரில் முனியசாமி, ராமசாமி, முத்தையா, சுந்தராஜ் என்று கிராமிய பேர்களாய் இருக்கும் ஊரில் இவர் பெயர் மட்டும் ஏன் வித்தியாசமாக உள்ளது என யோசித்ததும் உண்டு.

அங்குள்ள குழந்தைகளையும், பெரியவர்களையும் கூட்டி வைத்து இங்கிலீஷ் கிளாஸ் எடுப்பார். சிலர் ரசித்து கேப்பாங்க. சிலர் அவரை பார்த்தால் தெறித்து ஓடுவார்கள். சில பேர் அவரை மெண்டல் என்றும் சொல்லுவாங்க. அது போல சில நேரங்களில் நடந்து கொள்வார். குடும்பம்ன்னு எதுவும் கிடையாது. மடத்தில்தான் தூங்குவார். பசித்தால் யார் வீட்டிலையாவது போயி சோறு கேப்பார். இத்தனைக்கும் அவரது உடன்பிறந்த தம்பியும் அந்த ஊரில் உண்டு. ஆனால் சொந்தகாரர்கள்(அதாவது அவருடைய ஜாதி மக்கள்) வீட்டில் சாப்பாடு கேட்க மாட்டார். ஆனால் மீதி உள்ள அனைத்து வீட்டிலும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்.

அந்த காலத்துலயே இங்கிலீஷ் பேப்பர், இங்கிலீஷ் புக் வாங்கி படித்து அதை
மொழியாக்கம் செய்து மடத்தில் உள்ளவர்களுக்கு கூறுவார். கொஞ்ச காலம் ஊருக்கு என்ட்டர்ட்ரைனர் இவர்தான். அவருக்கு ஒருநாள் பீடி வாங்கி கொடுத்தால் ஒரு மாசத்துக்கு வணக்கம் வைப்பார்.

அப்புறம் நான் காலேஜ் சேர்ந்து இரண்டாம் ஆண்டு படிக்கும்போது எங்க ஜுனியர் பொண்ணு ஒண்ணு நல்ல பிரண்ட் ஆச்சு. அந்த பொண்ணு என்னோட பஸ்ஸ்டாப் மெட். அதாவது காலேஜ் போகும்போது ஒரே பஸ்ஸ்டாப்ல இருந்து கிளம்புறதால நல்ல பழக்கம். ஒருநாள் நானும் அம்மாவும் கோவிலுக்கு போகும்போது அந்த பொண்ணும் அவங்க அம்மாவும் கோவிலுக்கு வந்தாங்க. நான் பார்த்து பேசுறதுக்கு முன்னாடி எங்கம்மாவும் அவங்கம்மாவும் நல்லா பேச ஆரமிச்சிட்டாங்க. அப்புறம் விசாரிச்சப்புரம்தான் தெரிஞ்சது அவங்கதான் பீட்டரோட மனைவியும், மகளும்ன்னு. இவரை மெண்டல்ன்னு சொல்லி பிரிஞ்சு போயிட்டாங்களாம்.

ஆனால் எப்பயாவதுதான் அவரோட நடவடிக்கை வித்தியாசமா இருக்கும். மிச்சபடி நல்ல மனுஷன். சரி இப்போ எதுக்கு இதுன்னு கேக்குறீங்களா. உடல் நிலை சரியில்லாம இருந்த அவர் இப்போ கொஞ்சநாளா ஊர் பக்கம் காணவில்லை. உயிரோடு இருக்காரா இல்லையான்னு கூட தெரியலை. என்ன இருந்தாலும் ஒரு காலத்துல இவரை கலாய்க்கிறதுக்கு கூப்பிட்டு இங்கிலீஷ்ல அட்லீஸ்ட் "மை நேம் இஸ்" ன்னு சொல்ற அளவுக்கு கத்துக்கிட்ட ஊர்காரங்க அதிகம். அவர் எங்கயாவது நலமுடன் இருக்கட்டும்!!

ஞாயிறு, செப்டம்பர் 25

அவசியம் படிக்க வேண்டிய பயனுள்ள பதிவுகள்


நம் பிளாக் உலகில் ஏகப்பட்ட பதிவுகள் நிறைந்து கிடக்கின்றன. ஆபீஸ்ல வேலை செய்யுரமோ இல்லியோ பாதி பேரு பிளாக்குலையும்,பஸ்லையும் தான் குப்பை கொட்டுறோம்.

தினமும் வெட்டியாய் பதிவு போட நான் என்ன பன்னிக்குட்டியா இல்லை வைகையா?

நான் உருப்படியா ஆபீஸ்ல வேலை செய்யவிருப்பதால் இன்று என் வலையில் எதுவுமே எழுதலை. அதனால தமிழ்மணம், இட்லி ச்சீ இன்டலி எங்கயாவது போயி உங்களுக்கு பயனுள்ள பதிவை படிங்க. இல்லைன்னா ஆபீஸ்ல வாங்குற சம்பளத்துக்கு என்னை மாதிரி ஒழுங்கா வேலையைப் பாருங்க...

திங்கள், செப்டம்பர் 19

தோல் கொடுப்பான் தோழன்!!!


பன்னிக்குட்டி ராம்சாமி : ஏன்டா நாயே பழத்தை தின்னுட்டு தோலை என்கிட்டே கொடுக்குற?

Terror Pandian : தோல் கொடுப்பான் தோழன் கேள்விப்பட்டதில்லையா?

பன்னிக்குட்டி ராம்சாமி : அட ராஸ்கல். பிச்சு புடுவேன் பிச்சி. அது தோள் கொடுப்பான் தோழன்
================================================


பன்னிக்குட்டி ராம்சாமி :டேய் கோல்ட் பிஷ் க்கு தமிழ்ல என்ன?

Selvakumar : சளி பிடித்த மீன்

பன்னிக்குட்டி ராம்சாமி : !!!!!
================================================


பன்னிக்குட்டி ராம்சாமி : டேய் ஒரு கிலோ இரும்பு எடை அதிகமா? இல்லை ஒரு கிலோ பஞ்சு எடை அதிகமா?

Terror Pandian : ஒரு கிலோ இரும்புதான் எடை அதிகம்.

பன்னிக்குட்டி ராம்சாமி : தூ. ரெண்டும் ஒரே எடைதாண்டா..

Terror Pandian : அப்படியா. இரு ஒரு கிலோ பஞ்சை உன் தலைல தூக்கி போடுறேன். ஒரு கிலோ இரும்பையும் உன் தலைல தூக்கி போடுறேன். எதுல உன் தலை உடையுதுன்னு பாப்பமா?

பன்னிக்குட்டி ராம்சாமி : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
================================================



Terror Pandian :ஏன் மக்கா நல்லநாளும் அதுவுமா ஹரிணிய திட்டுறீங்க?

இம்சைஅரசன் பாபு : ஆயுத பூஜை அதுவுமா உன் புக்ஸ் எல்லாம் எடுத்துட்டு வா. அதுல உ போடணும்ன்னு சொன்னேன். எல்லா புக்ஸ்சும் எடுத்துட்டு வந்தாச்சு. Facebook மட்டும் எடுத்துட்டு வரலை மக்கா!!

Terror Pandian : கர். தூ
================================================


பன்னிக்குட்டி ராம்சாமி : Terror Pandian படிக்கும்போது அவங்க ஸ்கூல் டீச்சர் யார் தப்பு பண்ணினாலும் தலைல கொட்டுவாங்களாம். ஆனா நம்ம Terror Pandian தப்பு பண்ணினா மட்டும் தலைல கொட்ட மாட்டாங்களாம்.

வைகை வி : ஏன்? அவன் நல்லா படிக்கிற பையனா? இல்ல அழகா இருப்பானா?

பன்னிக்குட்டி ராம்சாமி : ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.

வைகை வி : அப்புறம் ஏன்?

பன்னிக்குட்டி ராம்சாமி : அவங்க ஸ்கூல்ல இங்கு குப்பையை கொட்டாதீர் ன்னு போர்டு இருந்துச்சாம். அதான்..
================================================


இப்போ கடைக்கு போயிட்டு வரும்போது TAMILNADU OPEN UNIVERSITY யை பார்த்தேன். பூட்டி இருந்தது. OPEN UNIVERSITY ன்னு பேரை வச்சிட்டு ஏன் பூட்டி இருக்காங்க? ங்கொய்யால ஏமாத்துராங்களா?
================================================


அப்ளிகேஷன் பார்ம் fill பண்ணும்போது "Please fill in CAPITAL" என்பதை பார்த்து விட்டு டெல்லி சென்ற Terror Pandian அவர்கள் அப்படியே தாஜ்மஹாலையும் பார்த்துவிட்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்
================================================


பன்னிக்குட்டி ராம்சாமி : டேய் யார் டா இந்த ஆளு?

Terror Pandian : புக் பைண்டிங் பண்றவரு மச்சி.

பன்னிக்குட்டி ராம்சாமி : அவரை ஏண்டா இங்க கூட்டிட்டு வந்த?

Terror Pandian : நீதான மச்சி சொன்ன நீ ஒரு திறந்த புத்தகம்ன்னு. உன்னை யாரும் கிழிச்சிட கூடாதில்ல. அதான்..

பன்னிக்குட்டி ராம்சாமி : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

================================================


வாசிங்க் மிசின் வாங்க போன இம்சைஅரசன் பாபு

பாபு: அண்ணே இது என்ன விலை?

கடைக்காரன்: பனிரெண்டாயிரம் தம்பி..

பாபு: அவ்ளோதானா ரொம்ப சீப்பா இருக்கு. என்கிட்டே இருபதாயிரம் ஆகும்ன்னு சொன்னாங்க.

கடைக்காரன்: இங்க விலை கம்மிதான்...

பாபு: ஆமாண்ணே இதுல சர்ப் பவுடர் எங்க போடணும்...

கடைக்காரன்: சர்ப் பவுடரா? தம்பி இது வாஷிங் மிசின் இல்லை. ஃபிரிட்ஜ்

பாபு: என்னது பிரிட்ஜா..... போங்கண்ணே.....இதுல எப்படிண்ணே வண்டி போகும்......?

================================================


பன்னிக்குட்டி ராம்சாமி : டேய் லீப் இயர்ன்னா என்னாடா?

Terror Pandian : இது கூட தெரியாதா? லீப் இயர்ன்னா இலை வருடம்

பன்னிக்குட்டி ராம்சாமி : !!!

================================================


இது டெரர் படிக்கிற காலத்துல நடந்தது

பன்னிக்குட்டி ராம்சாமி : ஏண்டா எக்ஸாம் நல்லாத்தான எழுதுன. அப்புறம் ஏன் சோகமா இருக்குற?

Terror Pandian : இல்ல மச்சி மாடல் எக்ஸாம்ன்னு சொன்னணங்க. ஏதாச்சும் மாடலிங் பிகர் சூப்பர்வைசிங் வரும்ன்னு நினைச்சேன். ஆனா நம்ம இத்துப்போன இங்கிலீஷ் வாத்தியார்தான் வந்தார்.

பன்னிக்குட்டி ராம்சாமி : அட நாதாரி. அப்போ கால் பரிச்சைன்னா காலால எழுதுவியா?

================================================


நான்: நீ பெரிய தொழிலதிபர். இன்னும் ஏண்டா சொந்த வீடு வாங்கலை?

இம்சைஅரசன் பாபு : அதுக்கு பில்கேட்ஸ் மனசு வைக்கணுமே.

நான் : அவரு ஏண்டா மனசு வைக்கணும்?

இம்சைஅரசன் பாபு : MS-Office தான இருக்கு MS-Home இல்லியே?

நான் : தூ

================================================
     

புதன், செப்டம்பர் 14

வரலாற்று நாயகன்-டெரர் பாண்டியன்

"துப்பார்க்கு துப்பாய துப்பார்க்கு துப்பாக்கித் துப்பாய தூஉம் மழை" என்று பாடினார் திருவள்ளுவர். ஒரு மனிதன் எதனால் காறி துப்பப்படுகிறான் என்பதன்  எடுத்துக்காட்டத்தான் அப்படிப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட ஒப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. மனிதனுக்குத் தெரிந்த முக்கியமான வேலை அடுத்தவனை குறை சொல்லி காறி துப்புவதுதான். ஆனால் ஒருவிதத்தில் அந்த சொற்றொடரைக் கூறிய திருவள்ளுவரை பாராட்ட வேண்டும். ஏனென்றால் உலகிலேயே எல்லோரும் ஒருத்தரை காறி துப்பவேண்டும் என்று அவர் சிந்தித்திருக்கிறார் அப்போது வேர்விட்ட அந்த சிந்தனை பல காலத்திற்குப் பிறகு உண்மை என்று நிரூபிக்கப்பட்டது அறிவியல் உலகில். ஆம் ஒருவனை எப்போது வேண்டுமானாலும் காறி துப்பலாம் என்று செய்து காட்டினார் ஒரு விஞ்ஞானி.

அந்தச் சாதனையின் மூலம் உலகம் பல நன்மைகளையும் கண்டிருக்கிறது, சில தீமைகளையும் கண்டிருக்கிறது. நன்மைகளை மட்டுமே நாம் அளவுகோலாகக் கொண்டுப் பார்த்தால் எந்தக் கண்டுபிடிப்பும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான். 

 

1946 ஆம் ஆண்டு ஏதோ ஒரு மாதம் ஏதோ ஒருநாள் எல்லோரையும் போல குழந்தையாகவே பிறந்தவர் டெரர் பாண்டியன் அவர்கள். வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருப்பார், அவர் கல்வியில் சிறந்து விளங்குவார் என அவரது பெற்றோர்கள் நினைத்தனர். ஆனால் அவரோ சிறிய வயதிலேயே மாங்காய் திருடி தின்பது, அடுத்த வீட்டு பெண்களை கேலி செய்து தர்மடி வாங்குவது போன்ற சாகசங்களில் சிறந்து விளங்கினார்.அப்போதுதான் ஊரே காறி துப்ப ஆரமித்தது. அதனால் இந்தியாவில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டார். இந்த மாதிரி மட்டமான உழைப்பு இருந்த அதே இடத்தில் அவருக்கு நிறைய புத்திக் கூர்மையும் இருந்தது. விளையாட்டுக்களில் கூட டெரர் பாண்டியனின் புத்திக்கூர்மை பளிச்சிட்டது. அவருக்கு 11 வயதானபோது ஒரு சோதனையைச் செய்துப் பார்த்தார். அந்த சோதனை என்னவென்றால் சுவர் ஏறி குதிக்காமல் மாங்காய் திருடுவது எப்படி. அதில் வெற்றியும் பெற்றார். 
 

சம வயது பையன்கள் விளையாடும் கோலிக்குண்டுகளை வைத்து சிறிய வயதிலயே டெரர் அவர்கள் இந்த கோலிக்குண்டுகளை காற்று அடித்து பெரிதாக்க முடியுமா என்பது போன்ற  பல ஆராய்ச்சிகளை செய்துபார்த்தார்.

அவர் கண்டுபிடித்த விசயங்கள் பல. அவர் கண்டுபிடித்த பல சொரிய ச்சீ அறிய விசயங்களை இங்கு பட்டியல் இடலாம்.

-
சமீபத்தில் காணாமல் போன ஒட்டகம்
- காணமல் போன ஜட்டி
- வீட்டு நாய்க்கு வைத்த பிஸ்கட்
- அடுத்த வீட்டு பெண் தொலைத்த நாய்க்குட்டி
- வீட்டில் அப்பா எங்கு ஒளிச்சு வைத்தாலும் தேடி எடுத்த சில்லறை காசுகள்

டெரர் அவர்களின் இப்படிப்பட்ட பல அறிய கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் காறி துப்பி நன்றி தெரிவித்துக்கொண்டது டெரர் கும்மி போரம். நல்லவேளையாக டெரர் அவர்கள் துபாயில் வாழ்ந்த காலம்வரை ஒட்டகமோ, அவரது முதலாளியோ காறி துப்பவில்லை இல்லையெனில் ஒட்டகத்தையே விரும்பிய அந்த விஞ்ஞானி டெரர் மனம் நொந்து போயிருப்பார்.

“முடியாது என்ற சொல் என் அகராதியில் கிடையாது” என்பது டெரர் பாண்டியன் உதிர்த்த புகழ்பெற்ற வாசகம். என்ன பண்றது அகராதி வாங்கும்போது பார்த்து வாங்கியிருக்க வேண்டும். வாங்கிய பிறகு முடியாது என்ற சொல் அதில் இல்லை என்று புலம்பி என்ன பயன். 


பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை. டெரர் இவை இரண்டையும் செய்வதும் இல்லை.




திங்கள், செப்டம்பர் 5

தேளும் மூட்டைப்பூச்சியும்!!



சின்ன வயசில இருந்தே தேள் அப்டின்னு சொன்னாலே எனக்கு ரொம்ப பயம். நான் வளர்ந்தது எலாம் கிராமம்தான். ஊர்ல எல்லா வீட்டுலையும் தேள் ஒரு அழையா விருந்தாளி. குடும்பத்தோட வருவாக. இருப்பாக. போவாக. அதுவும் குடும்ப தலைவர் ரொம்ப கருப்பா பயங்கரமா நம்ம இம்சை அரசன் பாபு மாதிரி இருப்பார். குழந்தைங்க எல்லாம் இளஞ்சிவப்பு நிறத்துல டிரான்ஸ்பரன்ட்டா இருப்பாங்க. நம்ம வீட்டுல குழந்தைங்க இருந்தா ரொம்ப பத்திரமா பார்துகனும். இல்லைன்னா தேள் சார் வந்து கடிச்சு வச்சிருவாங்க.

எல்லார் வீட்டுலையும் கண்டிப்பா தேள்கடிக்கு மருந்து வச்சிருப்பாங்க. சில நேரம் சில தேள்கள் பயங்கர பிரமாண்டமா பார்க்கவே பயமா இருக்கும். சின்ன தேள்ன்னா நம்ம வீரத்தைக் காட்டலாம். பெரிய தேள்ன்னா யாரையாச்சும் துணைக்கு தேடனும். ஒரு தடவை காட்டுக்கு போகும்போது சரியான மழை. மழைக்கு மரத்தடின ஒதுங்கினா மரம் முழுவதும் ஒரு சின்ன கேப் கூட இல்லாம மரம் முழுவதும் தேள்கள். பார்க்கவே பயங்கரம். அங்க பயத்துல ஓட ஆரமிச்சதுதான். வீடு வந்துதான் நின்னோம். இப்போ எல்லாம் தேள்கள் பார்க்க முடியிறதில்லை. தேள் இனம் அழிஞ்சுபோச்சா?


ஹாஸ்டல்ல படிச்ச எல்லோருக்கும் இந்த மூட்டைப்பூச்சி அனுபவம் கண்டிப்பா இருக்கும். அப்போ எல்லாம் சூட்கேஸ் எல்லாம் வாங்கி தரமாட்டாங்க. எல்லாம் டிரங்கு பெட்டிதான். தகரத்துல செஞ்ச அந்த பெட்டி. அதுக்கு ஒரு இத்து போன பூட்டு. அந்த பூட்டோட சாவியையும் அடிக்கடி தொலைச்சிட்டு பூட்டை உடைக்கிறது. இதுதான் ஹாஸ்டல்ல முக்கியமான வேலை. அதை விட முக்கியமான வேலை சண்டே அன்னிக்கு மூட்டைப்பூச்சியை நசுக்குறது. அப்போ மட்டும் வடிவேலு அந்த மூட்டைப்பூச்சியை கொல்ற மெசின் கண்டு பிடிச்சிருந்தார்ந்னா நல்லா இருந்திருக்கும்.

சண்டே ஆச்சுன்னா தகர பெட்டியை மொட்டை மாடிக்கு தூக்கிட்டு போயி வெயில்ல காயவச்சா பெட்டில உள்ள மூலை முடுக்குல இருந்தெல்லாம் ஓட்டபந்தயத்துல கலந்துக்கிற மாதிரி வேகமா ஓடி வரும். அதை நசுக்கினா அதிலிருந்து இன்னும் மூட்டைபூச்சி வரும்னு ஒரு புரளி உண்டு. அதனால பிடிச்ச  மூட்டைபூச்சி எல்லாத்தையும் ஒரு பேப்பர்ல போட்டு எரிச்சிடுவோம். ஒவ்வொரு வாரமும் இதுதான் வேலை. அந்த அனுபவமும் சுகமாத்தான் இருக்கும். இப்போ மூட்டைபூச்சியையும் பார்க்க முடிவதில்லை.

டிஸ்கி: என்னடா இது பதிவுன்னு கேக்குறீங்களா? சும்மா பழைய நியாபகம். அவ்ளோதான்

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது